இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு! போலிஸ் குவிப்பு

IMG 20170920 WA0012 - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகா வடகரை அருகே உள்ள வாவாநகரம் கிராமத்தை
சார்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணைச்செயலாளர் முகம்மது
உசேனின் மனைவி சேகம்மாள் (48) 17/ 9/17 அன்று காலை 8 மணிக்கு இறந்து விட்டார்

அவரின் பிரேதத்தை (ஜனாசாவை) நேற்று காலையில் வாவாநகரம் சுன்னத் ஜமாஅத்
பள்ளிவாசல் பொது மய்யவாடியில் அடக்கம் செய்ய. அனுமதி கேட்டபோது அவர்கள்
சுன்னத் ஜமாஅதினர் மறுத்ததால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் நேற்று
காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை அச்சசன்புதூர் காவல்நிலையத்தை
முற்றுகையிட்டு, இறந்து விட்டவரின் உலை எங்கள் நபிவழிப்படி அடக்கம் செய்ய
வேண்டும் என்று போராடி வந்தனர்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கோட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார்
மற்றும் செங்கோட்டை தாசில்தார் ஆகியோர் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை
நடத்தியும் தீர்வு இல்லாததால் இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் அமைப்பினர்கள் பல்வேறு ஊர்களிலிந்து வாவாநகரம் நோக்கி வரத்தொடங்கினர்

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

அதன் பின்னனர் அவர்கள் சேகம்மாளின் உடலை நபிவழிப்படி இறந்தவரின் மகன் தொழுகை
வைத்து வாவாநகரம் பள்ளிவாசல் பொது மைய்யவாடியில் அடக்கம் செய்ய சென்றபோது
சட்டம் ஒழுக்கு பிரச்சனை வரும் என்பதற்காக 50 மீட்டர் தூரத்தில் சங்கரன்கோவில்
காவல் துணை கண்கானிப்பாளர் ராஜேந்திரன் , புளியங்குடி காவல் துணை
கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் செங்கோட்டை
சுரேஷ்குமார், கடையநல்லூர் கோவிந்தன், புளியங்குடி ஆடிவேல்,ஆலங்குளம்
ஐய்யப்பன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலிசாரால் தடுத்து
நிறுத்தப்பட்டது

அதன் பின்னர் தென்காசி சப் கலெக்டர் ராஜேந்திரன் செங்கோட்டை தாசில்தார்
ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தினர்

இறந்து விட்ட உடல் அரசுக்கு சொந்தமானது அதனை அடக்கம் செய்யும் இடமும் வக்பு
மையவாடியும் அரசுக்கு சொந்தமானது… எனவே அதனை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை
என்பதை எடுத்துக்கூறி இறந்தவரின் உறவினர்கள் ஐந்து நபர்கள் மட்டுமே அடக்கம்
செய்ய அனுமதிப்பது என்ற முடிவின் படி அமைதியான முறையில் அடக்கம்
செய்யப்பட்டது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories