மீத்தேன் திட்டத்திற்கு முழுமையாக மூடுவிழா நடத்தப்பட வேண்டும்: ராமதாஸ்

சென்னை: மீத்தேன் திட்டத்துக்கு முழுமையாக மூடுவிழா நடத்தப் பட வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற மாநிலங்களவையில் மீத்தேன் எரிவாயுத் திட்டம் குறித்த வினாவுக்கு விடையளித்த பெட்ரோலியஅமைச்சர் தர்மேந்திர பிரதான், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் அதற்கான நிபந்தனையை நிறைவேற்றாததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். காவிரி பாசன விவசாயிகளுக்கு ஓரளவு நிம்மதியளிக்கும் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை சில தொழில்நுட்ப குறைபாடுகளின் அடிப்படையில் தான் மத்திய அரசு ரத்து செய்யவுள்ளது என்பதும், மீத்தேன் திட்டத்தை கைவிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டவுடன், மத்திய அரசின் நிபந்தனைகளை நிறைவேற்றும் சக்தி கொண்ட வேறு நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்த முன்வந்தால், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, மத்திய அரசின் அறிவிப்பு தானாக கிடைத்த தற்காலிக நிம்மதி தானே தவிர, டெல்டா விவசாயிகளை அச்சுறுத்தும் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு அல்ல. இந்தத் தீர்வு கூட மத்திய அரசால் கிடைத்தது அல்ல; மீத்தேன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்த்தை பெற்ற கிரேட் ஈஸ்ட்ரன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், காவிரி பாசனப்பகுதி விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பணிந்து திட்டத்தைத் தொடங்காமல் பின்வாங்கி ஓடியதால் கிடைத்தது ஆகும். தமிழக விவசாயிகளின் நலன் கருதி மீத்தேன் எரிவாயு திட்டத்தை முழுமையாக ரத்து செய்கிறோம் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இத்திட்டம் காவிரி பாசனப்பகுதி விவசாயிகளின் தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கும் என்பது உறுதி. மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்களில் 21 லட்சம் ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்படும். 667 கி.மீ. பரப்பளவில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இவற்றைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இதுகுறித்த அறிவிப்பை அனைத்து ஊடகங்களிலும் விளம்பரமாக வெளியிட்டு மக்கள் மனதில் நிலவும் அச்சத்தை போக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Topics

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories