மீத்தேன் திட்டத்திற்கு முழுமையாக மூடுவிழா நடத்தப்பட வேண்டும்: ராமதாஸ்

சென்னை: மீத்தேன் திட்டத்துக்கு முழுமையாக மூடுவிழா நடத்தப் பட வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற மாநிலங்களவையில் மீத்தேன் எரிவாயுத் திட்டம் குறித்த வினாவுக்கு விடையளித்த பெட்ரோலியஅமைச்சர் தர்மேந்திர பிரதான், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் அதற்கான நிபந்தனையை நிறைவேற்றாததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். காவிரி பாசன விவசாயிகளுக்கு ஓரளவு நிம்மதியளிக்கும் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை சில தொழில்நுட்ப குறைபாடுகளின் அடிப்படையில் தான் மத்திய அரசு ரத்து செய்யவுள்ளது என்பதும், மீத்தேன் திட்டத்தை கைவிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டவுடன், மத்திய அரசின் நிபந்தனைகளை நிறைவேற்றும் சக்தி கொண்ட வேறு நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்த முன்வந்தால், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, மத்திய அரசின் அறிவிப்பு தானாக கிடைத்த தற்காலிக நிம்மதி தானே தவிர, டெல்டா விவசாயிகளை அச்சுறுத்தும் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு அல்ல. இந்தத் தீர்வு கூட மத்திய அரசால் கிடைத்தது அல்ல; மீத்தேன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்த்தை பெற்ற கிரேட் ஈஸ்ட்ரன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், காவிரி பாசனப்பகுதி விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பணிந்து திட்டத்தைத் தொடங்காமல் பின்வாங்கி ஓடியதால் கிடைத்தது ஆகும். தமிழக விவசாயிகளின் நலன் கருதி மீத்தேன் எரிவாயு திட்டத்தை முழுமையாக ரத்து செய்கிறோம் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இத்திட்டம் காவிரி பாசனப்பகுதி விவசாயிகளின் தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கும் என்பது உறுதி. மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்களில் 21 லட்சம் ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்படும். 667 கி.மீ. பரப்பளவில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இவற்றைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இதுகுறித்த அறிவிப்பை அனைத்து ஊடகங்களிலும் விளம்பரமாக வெளியிட்டு மக்கள் மனதில் நிலவும் அச்சத்தை போக்க வேண்டும்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories