பஞ்சாயத்து நிதியில் 20 லட்சம் முறைகேடு! இருவர் கைது!

Dharmapuri

தர்மபுரி அருகே பஞ்சாயத்து நிதியில், 20 லட்சம் ரூபாய் முறைகேடு செய்த, செயலர், அவரது நண்பரை, போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி யூனியன் மஞ்சவாடி பஞ்., செயலராக பணியாற்றியவர் கருணாகரன், 51; இவரது நண்பர் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த குமார், 41; இருவரும் பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ., அலுவலக போலி முத்திரை தயாரித்து, காசோலையில் போலி கையெழுத்திட்டு, 2017 முதல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

2019 முதல் அலுவலகம் வருவதை கருணாகரன் தவிர்த்துள்ளார். இதுகுறித்து பி.டி.ஓ., கிருஷ்ணன், தர்மபுரி குற்றப்பிரிவு போலீசார், தர்மபுரி எஸ்.பி., ராஜனிடம் புகாரளித்தார்.

இதையடுத்து குற்றப்பிரிவு டி.எஸ்.பி., கருணாகரன், போலீசார் விசாரித்தனர். இதில், கருணாகரன், குமாருடன் சேர்ந்து, போலி முத்திரை மற்றும் ஆவணங்கள் தயாரித்து, 20.14 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது.

அவர்களது வீட்டிலிருந்த போலி அரசு முத்திரை, ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

கருணாகரன் முறைகேட்டில் ஈடுபட்ட காலத்தில் பணியாற்றிய பி.டி.ஓ.,க்கள் உட்பட, இத்துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளிடமும், விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

2வது முறையாக மஞ்சவாடியை சேர்ந்த கருணாகரன், அதே பஞ்.,ல் செயலராக பணிபுரிந்தார். கடந்த, 2007ல், அப்போதைய பஞ்., தலைவருடன் சேர்ந்து, ஆறு லட்சம் ரூபாய் மோசடி செய்தார். இதனால் சஸ்பெண்டான அவர், உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று, அதே பஞ்சாயத்தில் பணியை தொடர்ந்தார்.

தற்போது, 20.14 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கியுள்ளார். மஞ்சவாடி பஞ்.,ல், 2017ல் இருந்து, பி.டி.ஓ., மாவட்ட திட்ட அலுவலர் ஆகியோர், கணக்குகளை முறையாக தணிக்கை செய்யவில்லை. இதனால் இவர்கள், கருணாகரன் முறைகேட்டுக்கு உதவிய இருக்கலாம் என்று, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories