பப்ஜி விளையாட்டு: மனமுடைந்த கல்லூரி மாணவன் தற்கொலை!

papji

பப்ஜி விளையாட்டுக்கு தடை செய்ததால் விரக்தியடைந்த கல்லூரி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஆந்திர மாநிலம். அனந்தபுரம் நகர் வருவாய் காலனியை சேர்ந்தவர் நரசிம்மா. இவரது மனைவி இமஜா ராணி. இவர்களது மகன் கிரண்குமார்.

இவர் சென்னை தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் கல்லூரிகள் திறக்காததால் கடந்த 6 மாதங்களாக கிரண்குமார் வீட்டில் இருந்தார். அப்போது, ‘பப்ஜி’ விளையாட்டுக்கு அடிமையானாராம்.

இந்நிலையில், ‘பப்ஜி’ விளையாட்டு உட்பட சீனாவின் செல்போன் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால், பப்ஜி விளையாட முடியாமல் கிரண்குமார் தவித்தார். கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்து திடீரென மாயமானார்.

அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். போலீசில் நரசிம்மா புகார் அளித்தனர்.

நேற்று நரசிம்மாவின் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் துர்நாற்றம் வீசியது. அதன் அறைக்கதவை உடைத்து பார்த்தபோது கிரண்குமார் பேனில் தூக்குப்போட்டு இறந்துள்ளார்.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ‘

பப்ஜி’ விளையாட்டிற்கு அடிமையாகி இளைஞர் கல்லூரியில் படிப்பவர் தற்கொலை செய்து கொண்டது அவரது நண்பர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்கட்சிகள், மத்திய அரசு பப்ஜியை தடை செய்தது தவறு இதனால் அந்த மாணவன் மன உளைச்சலில் இறந்துவிட்டான் என இதற்கு ஒரு அரசியல் செய்வார்களோ எனவும் கட்சிநிதி கொடுத்து இத்தகைய தற்கொலைக்கு ஆதரவு தெரிவிப்பார்களோ எனவும் மக்கள் அச்சப்படுகின்றனர்.

அறியாமையை நீக்கி மன உறுதியற்று சிறுபிள்ளை தனமாக இன்றைய இளைஞர்கள் நடந்து கொள்வது வேதனையளிப்பதாகவும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories