இந்த அறிகுறிகள் இருந்தா… உடனடியா மருத்துவ மனையை அணுகுங்க: தென்காசி ஆட்சியர் வேண்டுகோள்!

tenkasi-collector-arun-sundrar-dayalan
tenkasi-collector-arun-sundrar-dayalan

காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ மனையை அணுக வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், பழங்கோட்டை பஞ்சாயத்திற்குட்பட்ட வடக்கு அழகுநாச்சியார்புரத்தில் கடந்த வாரம் நடைபெற்ற மருத்துவ முகாமில் 70 வயது முதியவர் ஒருவர் கலந்துகொண்டுள்ளார். அவர் ஏற்கெனவே ஆஸ்துமா மற்றும் காச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அம்முகாமில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கடந்த 16.09.2020-ல் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. உடனே அவரது குடும்பத்தாருக்கு குருவிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக தகவல் கொடுக்கப்பட்டு மேல்சிச்சைக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால், அவர் குடும்பத்தாரும், நெருங்கிய உறவினர்களும் முதியவரை மேல்சிகிச்சைக்கு அனுப்பவில்லை .

இதனால் மேற்படி முதியவர் 5 நாட்களில் இறந்துவிட்டார். அவரது குடும்பத்தினர் அறியாமையால் செய்த தவறினால் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டது. அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி சிகிச்சைக்கு ஒத்துழைத்திருந்தால் அவரின் மரணத்தை தடுத்திருக்க முடியும்.

இதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் பொதுமக்கள் கவனமுடன் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் இலவச மருத்துவ முகாம்களுக்குச் சென்று கொரோனா மற்றும் டெங்கு பரிசோதனை செய்து உரிய மருத்துவ சிகிச்சை பெற்று தங்களது உடல் நலத்தைப் பாதுகாத்து உயிரிழப்பைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories