December 6, 2025, 1:32 PM
29 C
Chennai

மாணவர்களுக்காக மொபைல் டவர் அமைத்துக் கொட ுத்த சோனு சூட்.

மாணவர்களுக்காக மொபைல் டவர் அமைத்துக் கொடுத்த சோனு சூட்.

ரியல் ஹீரோ சோனூசூட் தன் சேவை நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே வருகிறார்.

எங்காவது யாருக்காவது பிரச்சனை என்ற விஷயம் தெரிந்த உடனே… தன் கண் பார்வைக்கு வந்தால் போதும்… உடனே அதற்குத் தீர்வு கண்டு தன் பெரிய மனதை வெளிப்படுத்தி வருகிறார்.

லாக்டௌன் தொடங்கிய நாள் முதல் பல உதவிச் செயல்களை புரிந்துள்ள சோனு சூட் அண்மையில் சிக்னல் கிடைக்காமல் ஆன்லைன் வகுப்புகளைத் தவறவிட்ட மாணவர்களுக்கு உதவி அளித்து உள்ளார்.

நண்பர்களோடு சேர்ந்து மொபைல் டவர் ஏற்பாடு செய்து அவர்களுடைய கல்வி தடைபடாமல் உதவியாக நின்றுள்ளார்.

இதனால் சோனூசூட் மீது மீண்டும் ஒருமுறை பாராட்டு மழை பொழிந்து வருகிறது.

லாக்டௌன் பின்னணியில் கல்விக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. செல்வந்தர்களின் வீட்டு மாணவர்களுக்கு படிப்பு நன்றாகவே நடந்து வந்தாலும் மிகவும் ஏழை குடும்பத்து மாணவர்கள் மட்டும் ஸ்மார்ட்போன் கிடைக்காமல் பல தடங்கல்களை எதிர் கொண்டுள்ளார்கள். எப்படியோ சிரமப்பட்டு போன் வாங்கினாலும் சிக்னல் கிடைக்காமல் இதுபோன்ற சூழ்நிலையில் சிரமத்துக்கு உள்ளாகிய சில மாணவர்களின் வீடியோக்கள் சோஷல் மீடியாவில் வைரல் ஆயின.

ஹரியானாவில் உள்ள மோர்னில் என்ற இடத்தில் தீபனா கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் சிக்னலுக்காக மரக் கிளைகளில் அமர்ந்து கல்வி கற்கும் காட்சிகளை ஷேர் செய்தார் ஒரு நெட்டிசன். மேலும் அந்த படங்களை சோனூசூட் மற்றும் அவருடைய நண்பர் கரன் கில்ஹோத்ராவுக்கு டேக் செய்தார். உடனடியாக அந்த இரு நண்பர்களும் மொபைல் டவர் கட்ட ஏற்பாடு செய்து விட்டார்கள்.

இந்த விஷயம் குறித்து பேசுகையில், "மாணவர்களே நம் எதிர்காலத் தலைவர்கள். அவர்களுக்கும் சமமான உரிமைகளும் உயர்ந்த எதிர்காலமும் பெறுவதற்கு அனைத்து வித தகுதிகளும் உள்ளன. அவற்றைப் பெறுவதில் மாணவர்களுக்கு எப்படிப்பட்ட தடங்கல்களும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நம் அனைவரின் கடமை. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை ஏற்படாவண்ணம் மொபைல் டவர் ஏற்பாடு செய்ததை எனக்கு கிடைத்த கௌரவமாக கருதுகிறேன். இனி அங்கு சிக்னலுக்காக யாரும் மரத்தின் மீது ஏறி கிளைகளில் அமர வேண்டிய தேவை இருக்காது" என்று எப்போதும் போலவே தன் நல்ல மனதை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார் சோனூசூட்.

அண்மையில் சண்டிகரில் சில மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் அவர் வாங்கிக் கொடுத்த விஷயம் தெரிந்ததே. ஆபத்தில் உள்ளவர்களுக்கு நான் இருக்கிறேன் என்று உதவி செய்து அவர்களை துயரக் கடலில் இருந்து கரை சேர்க்கும் மனிதாபிமானத்திற்கு அடையாளமாக நின்றுள்ளதால் ஐநா சபை அவருக்கு ஸ்பெஷல் ஹ்யூமானிடேரியன் அவார்டு அளித்து கௌரவித்த விஷயம் தெரிந்ததே.

Screenshot 2020 10 08 14 48 00 897 com.android.chrome - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories