அடிக்கடி கை கழுவுங்க… நமக்கு நல்லது! நிரந்தரமா கை கழுவுங்க… நாட்டுக்கு நல்லது!

kushbo1
kushbo1

அடிக்கடி கை கழுவுங்கள் இது corona சொல்லிய பாடம்… நிரந்தரமாய் கையை கழுவுங்கள் இது மோடி ஜி பீகாரில் உணர்த்திய பாடம்~  வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும்!! 

இப்படி ஒரு கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் அண்மையில் பாஜகவில் இணைந்துள்ள நடிகை குஷ்பூ !

அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ. இவர் நேற்று பீகார் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்  ‘நிரந்தரமாக கையை கழுவுங்கள்’ என காங்கிரசை மறைமுகமாக விமர்சித்து தனது கருத்தை பதிவு செய்திருந்தார் 

நடிகை குஷ்பூ 90களில் பிரபலமான நடித்து பெயர் வாங்கி இருந்தார் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த குஷ்பூ பின்னாளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஊடகத்துறையின் வெளிச்சத்திலேயே தன்னை வைத்திருந்தார் இந்த நிலையில் கடந்த 2010ல் திமுக.,வில் இணைந்து அரசியலுக்குள் நுழைதார் நடிகை குஷ்பு! 

திடீரென அவருக்கு திமுக.,வில் உள்ளேயே புகைச்சல் தொடங்கியதால், கட்சியை விட்டு வெளியேறக் கூடிய நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு தாவுவது போல காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேசிய செய்தி தொடர்பாளர் என்ற பதவியையும் பெற்றார் நடிகை குஷ்பூ.  தொடர்ந்து திமுக காங்கிரஸ் கூட்டணிக்காக பிரச்சாரமும் செய்து வந்தார்

ALSO READ:  அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!
kushboo
kushboo

சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு, கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விலகுவதற்கு முடிவு செய்தார். அதே நேரத்தில், தன்னை அதுவரை கடுமையாக தாம் விமர்சித்து வந்த பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொள்ள முடிவு செய்தார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது குஷ்பூ பாஜகவில் இணைந்ததற்காக பலர் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்

காங்கிரஸ் கட்சியில் இருந்த வரைக்கும் ராகுல் காந்திக்கு ஆதரவாக ட்விட்டர் பதிவுகளை மேற்கொண்டு வந்த குஷ்பு மோடிக்கு எதிராகவும் பாஜகவை விமர்சித்தும் கடுமையான டிவிட்டர்  பிரசாரங்களை முன்வைத்தார். இந்த நிலையில் அவர் பாரதிய ஜனதாவில் இணைந்த பின்னர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பதிவில் கருத்துகளை வெளிப்படுத்தி வந்தார் 

நடிகை குஷ்பூ பாஜகவில் இணைந்த போது காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி மிக கடுமையான விமர்சனத்தை குஷ்பு மீது முன்வைத்தார் குஷ்புவை தாங்கள் நடிகையாகவே பார்ப்பதாகவும் அவர் அரசியல் தலைவராக பார்க்கப்படவில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தார் குஷ்புவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

 இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து நடிகை குஷ்பூ தனது டிவிட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கூடுதல் சுமையாகக் கருதி அது தனித்து விடப்படும்,’ என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

அதற்கு ஏற்றார்போல் பீஹாரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனைக் குறிப்பிட்டு விமர்சிக்கும் வகையில் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் …: அடிக்கடி கை கழுவுங்கள் இது கொரோனா சொல்லிய பாடம். நிரந்தரமாய் கையை கழுவுங்கள் இது மோடிஜி பீஹாரில் உணர்த்திய பாடம். வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும்… என்று பதிவிட்டிருந்தார்

ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்று பல்வேறு கருத்துக்கள் அக்கட்சியில் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் குஷ்புவின் இந்தக் கருத்து, திமுக., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories