மார்கழிச் சிறப்பு: தெருக்களில் பஜனை வீதி உலா தொடக்கம்!

bajan-in-nellai
திருநெல்வேலி டவுன் செண்பகம் பிள்ளை தெரு மார்கழி மாத பஜனை வீதி உலா இன்று காலை தொடங்கியது

மார்கழி மாதம் இன்று பிறப்பதை முன்னிட்டு, சகல விஷ்ணு ஆலயங்களிலும் அதிகாலை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் தொடங்கின. இன்று முதல் மார்கழி மாதம் முழுவதும் தினசரி காலை திருப்பாவை பாடல்களை பக்திப் பரவசத்துடன் பாடும் நிகழ்ச்சியும் தொடங்கியது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் திருமால் திருக்கோயில்களில் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் இந்த மாதம் முழுதும் நடக்கின்றன. தற்போது கொரோனா நோய்த் தொற்று காலம் என்பதால், திறந்தவெளியில் ஊர்வலம் இல்லாமல் கோவில் வளாகத்தில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து, பஜனைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மார்கழி மாத வழிபாடு என்பது காலங்காலமாகக் கடைப்பிடிக்கப் பட்டு வரும் மிகப் பழைமையான வழிபாடு! மார்கழி மாதத்தில் பெண்கள் இருக்கும் பாவை நோன்பு என்பது தொன்று தொட்டு கடைப்பிடிக்கப் பட்டு வருவது. தமிழ்ப் பண்டைய இலக்கியங்களில் குறிக்கப் படும் நோன்பு இது. பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி, ஆழ்வார்கள் பாசுரங்களைப் பாடி மகிழ்ந்து விரதத்தைக் கடைபிடிக்கிறார்கள்.

அதே போல் சிவாலயங்களிலும் திருவெம்பாவை நோன்பு கடைப்பிடிக்கப் படுகிறது. ஆருத்ரா தரிசனம் எனப்படும் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்திற்கு 9 நாட்கள் முன்பு தொடங்கி கடைப்பிடிக்கப்படுகிறது. இது, கார்த்தியாயினி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.

இதன் ஓர் அம்சமாக, அதிகாலை எழுந்து நீராடி, சக பக்தர்களுடன் இணைந்து, இறைவனின் திருப்பெயரைப் பாடி, வீதிகளில் உலா வந்து, அனைவருக்கும் தெய்வீக மணம் கமழச் செய்வர். இதை முன்னிட்டு, பல்வேறு தலங்களிலும், கிராமங்களிலும் அன்பர்கள் வீதிகளில் பஜனைப் பாடல்களைப் பாடி, வலம் வந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories