ஆண்டவனின் மாதம் – இது ஆண்டாளின் மாதம்!

Published:

srivilliputhur andal temple gopuram
srivilliputhur andal temple gopuram

“அகிலமெலாம் பின்னே”
(மீ.விசுவநாதன்)

ஆண்டவனின் மாதம் – இது
ஆண்டாளின் மாதம் – தமிழ்ப்
பூண்டவளின் நாவில் – திரு
பூத்திருப்பான் மாலன்.

ஆலயங்கள் யாவும் – அந்த
ஆதியினைப் பாடும் – ஒளி
நீலநிற வானம் – கண்ணன்
நித்தியத்தைப் பேசும்.

வண்ணவண்ணப் பூக்கள் – மணி
வண்ணனழ காகும் – எனக்
கண்ணிலொற்றிக் கொண்டால் – மனக்
கவலையோடிப் போகும்.

போகியோகி யாவான் – சிறு
பொறிதெரிந்த உள்ளே – அதாய்
ஆகிப்போன பின்னே – இந்த
அகிலமெலாம் பின்னே.

Related articles

Recent articles

spot_img