சுபாஷிதம்: இயற்கைப் பாடங்கள்!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Published:

subhashitam-3
subhashitam-3

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

61. இயற்கைப் பாடங்கள்!

ஸ்லோகம்:

பரோபகாராய வஹந்தி நிம்னகா:
பரோபகாராய துஹந்தி தேனவ: ! 
பரோபகாராய பலந்தி பூருஹா:
பரோபகாராய சதாம் விபூதய : !!
– பர்த்ருஹரி.

பொருள்:

பிறருக்கு உபகாரம் செய்வதற்காகவே நதிகள் பாய்கின்றன. பசுக்கள் பால் சுரக்கின்றன. மரங்கள் பழமளிக்கின்றன. சான்றோரிடம் சேரும் செல்வம் பரோபகாரத்திற்காகவே! 

விளக்கம்:

தன்னிடம் உள்ள செல்வத்தை தனக்காக அன்றி பிறருக்கு உதவுவதற்கு பயன்படுத்துவர் சான்றோர். நதி தன் நீரைத் தானே குடிக்காது. பசு தன் பாலைத் தானே  குடிக்காது. மரம் தன் பழங்களைத் தானே தின்னாது. தனக்கன்றி  பிறருக்காக, சுயநலம் இன்றி வாழ வேண்டும் என்று நினைப்பவர் சான்றோர். இயற்கை அவர்களுக்கு முன்னுதாரணம். அப்படிப்பட்ட சான்றோர் நமக்கு முன்னுதாரணம்.

இவ்வாறு பரோபகாரத்திற்காக உள்ள நதிகளை சுயநலத்திற்காக நாம் மாசு படுத்துகிறோம். பால் சுரக்கும் பசுக்களை பணத்தாசையோடு இறைச்சிக் கூடங்களுக்கு அனுப்புகிறோம். பிராண வாயுவை உற்பத்தி செய்யும் மரங்களை முன்னேற்றம் என்ற பெயரில் வெட்டிச்  சாய்க்கிறோம்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

சுற்றுச்சூழல் சமநிலையைப் பாழாக்கி இயற்கைச் சீற்றத்தை விலைக்கு வாங்குகிறோம். இன்றைய நிலையை நினைத்து பார்த்தாலே அச்சமாக உள்ளது. நாம் மாறாவிட்டால் மேலும் விபரீதமே நிகழும். தெரிந்தும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் கல்மனத்தவரே!

Related articles

Recent articles

spot_img