February 22, 2026, 12:49 PM
29.6 C
Chennai

பெங்களூர்-நாகர்கோவில் இடையே மதுரை வழியாக சிறப்பு ரயில்!

kolkatta train

பெங்களூர்: பெங்களூர்-நாகர்கோவில் இடையே மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக பெங்களூருக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்களில் இதுவும் இணைந்தது.

இந்த நிலையில், ஜனவரி 31ம் தேதி முதல் சிறப்பு ரயில் என்ற பெயரில், இந்த ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது. பெங்களூரில் இருந்து இந்த ரயில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் நாகர்கோவிலுக்கு இயக்கப்பட உள்ளது.

நாகர்கோவிலில் இருந்து வருகிற 1ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. ரயில் எண்.07235 பெங்களூருவில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.55 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது.

காலை 6.10 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் வந்தடையும். காலை 8.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், வருகிற 1ம் தேதி இந்த ரயில் எண்.07236, நாகர்கோவிலில் இருந்து இரவு 7.10 மணிக்கு புறப்படுகிறது. இரவு 9 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் வந்தடைகிறது.

நள்ளிரவு 11.50 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்தடையும். பிறகு, மறுநாள் காலை 9.20 மணிக்கு பெங்களூரர் ரயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரயில், பெங்களூர் கண்டோன்மெண்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 2 பார்சல் பெட்டிகளுடன் இணைந்த 2ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 3 மூன்றடுக்கு ஏசி கோச், ஒரு 2 அடுக்கு ஏசி கோச், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கோச்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த தினசரி ரயில்களில் பயணம் செய்ய முன்பதி தினமும் அவசியம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories