10 லட்சரூபாய்… 10 வயது சிறுமி… விற்ற தாய்!

woman - 2026

சின்னபொன்ணு என்ற சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் சேலம் டவுன் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அளித்த புகாரில், 54 வயதான கிருஷ்ணன் என்ற தொழில் அதிபரின் வீட்டில் எனது மகள் வேலை செய்து வருகிறாள். இந்நிலையில், எனது மகள் எனது 10 வயது பேத்தியை அந்த தொழிலதிபருக்கு விற்று விட்டார்.

அந்த பிஞ்சு குழந்தையை ஏற்காடு, கோவா, சென்னை என பல இடங்களுக்கு அழைத்து செல்கிறார், ஆனால் நான் பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்.
அதனால் நீங்கள் அவளை அழைத்து விசாரியுங்கள் என்று கூறினார்.

இதை தொடர்ந்து, சைல்டு லைன் ஆமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியை மீட்டு பாதுகாப்பு இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், அந்த சிறுமியின் கொடூர தாய், உறவுக்கார பெண் ஒருவரிடம், ”நான் 10 லட்சம் ரூபாய் வாங்கி பேங்ல போட்டுட்டேன், நினைச்சப்ப அத எடுத்து வீட்ட கட்டிக்கிட்டு போயிருவேன். இனிம அவங்க எங்க போனாலும் நான் கேக்க முடியாது, யாராவது தேவயில்லாம பிரச்சனை பண்ணாங்கன்னா சென்னைக்கு கூட்டிக்கிட்டு போயிருவாரு.” என்று பேசியுள்ளார்.

இந்த ஆடியோ நேற்று சேலத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசிய மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், ”சிறுமியை சைல்டு லைன் நிர்வாகிகள் மீட்டு ஹோமில் வைத்துள்ளதை தொடர்ந்து நாங்கள் விசாரித்து வருகிறோம்.

சிறுமியை தத்து கொடுப்பதற்கான பேச்சுவார்த்தையை அவர்கள் நடத்தி வருகின்றனர்,” என்றார். ஆனால், இதுபற்றி மகளிர் போலீசார் சிறுமியின் பாட்டியிடம், ”குழந்தையை தாய் தானே தத்து கொடுத்துள்ளார்? உங்கள் வேலையை பார்க்க வேண்டியது தானே?” என அலட்சியமாக பேசியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories