பிறந்த பெண் குழந்தையை மருத்துவமனையிலே விட்டு வீடு வந்த தாய்!

sankitha
sankitha

பெற்ற குழந்தையை, தாயே யாரும் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் போட்டு விட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

30 வயதான ஜெயச்சந்திரன் என்ற நபர், திண்டுக்கல் அருகே உள்ள சாணார்பட்டி குரும்பபட்டியில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், 24 வயதான இவரது மனைவி சங்கீதா, கற்பமாக இருந்ததை அடுத்து, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, அவருக்கு 1½ கிலோ எடையில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்ததுள்ளது. ஆனால், சங்கீதா தான் பெற்ற அந்த குழந்தையை ஆஸ்பத்திரியிலேயே அவர் விட்டு விட்டு தனது வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனையடுத்து, சிறிது நேரத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன அந்த குழந்தை கதறி அழத் தொடங்கியது. அப்போது, அங்குள்ள ஊழியர்கள் சங்கீதாவை ஆஸ்பத்திரி முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை, அதே சமயம் அவர் வைத்திருந்த பொருட்களும் காணாமல் போனதால் அவர் வீட்டுக்கு சென்று விட்டது தெரியவந்தது.

இதனால், மருத்துவமனையில் இருந்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனைக்கு விரைந்து வந்த அதிகாரிகள், மருத்துவமனையில் அவர் அளித்த முகவரியை வைத்து அந்த பெண்ணின் வீட்டுக்கு அதிகாரிகள் சென்று பார்த்தனர்.

அப்போது அவர், தனக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருப்பதாகவும் 3-வது குழந்தையை தன்னால் வளர்க்க முடியாது, அதனால் ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுமாறு கூறியுள்ளார்.

மேலும், தனது கணவர் ஜெயசந்திரனின் வருமானம் தங்களுக்கே பற்றாக்குறையாக இருப்பதால், தனால் 3-வதாக பிறந்த பெண் குழந்தையையும் வளர்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வீடிற்கு சென்ற சமூக நலத்துறை அதிகாரிகள் ஜெயசந்திரன் குடும்பத்தினரிடம் முறையாக எழுதி வாங்கிக் கொண்டனர்.

குழந்தை எடை குறைவாக இருப்பதால் அரசு ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை அளித்து பிறகு காந்திகிராமத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்க சமூக நலத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மற்றோரு பக்கம், பச்சிளம் குழந்தையை கேட்பாரற்ற நிலையில் கைவிட்டுச் சென்ற குற்றத்திற்காக, சமூக நலத்துறை அதிகாரிகள் சங்கீதா மீது போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில், நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories