பல் சொத்தையா.. வலியால் துடிக்கிறீர்களா?

Property pain
Property pain

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பற்சொத்தையால் அவதிபடுகிறார்கள். பற்சொத்தை ஏற்படுவதற்கு காரணம் அதிகம் இனிப்பு வகைகளை உணவில் சேர்ப்பது தான் என்கின்றனர் பல் மருத்துவர்கள். ஒரு நாளைக்கு இரு முறை பற்களை சுத்தம் செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது.

ஆனால் அதை யாரும் முறையாக பின்பற்றுவது இல்லை. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் இனிப்பு வகை சாப்பிட்டு அப்படியே உறங்கி விடக்கூடாது. இதனால் நிச்சயம் பற்சொத்தை ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

நாம் சாப்பிடும் இனிப்பு வகைகளில் கொழுப்பு மற்றும் பைடேட்ஸ் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. இவை நம் பற்களில் இருக்கும் கால்சியத்தின் அளவில் பாதிப்பை உண்டாக்கி பல்லில் சொத்தை உருவாக காரணமாக ஆகிவிடும்.

குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் ஒரு முறை பல் விழுந்து விட்டாலும் மீண்டும் முளைத்து விடும். ஆனால் பெரியவர்களுக்கு அப்படி அல்ல. பல்லை எடுத்து விட்டால் மீண்டும் முளைப்பதில்லை. அது ஒரு குறையாகவே நம்முடன் இருந்து விடும். இதனால் பற்களை குறித்த போதிய விழிப்புணர்வு நமக்கு அவசியம் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

Toothache
Toothache

நம்மில் பலரும் பற்களை பற்றிய போதிய அக்கறை கொள்வதில்லை. பற்களில் ஒரு பிரச்சினை என்று வந்துவிட்டால் தான் அதைக் குறித்த மருத்துவத்தை நாடி ஓடுகிறோம். பற்சொத்தை ஏற்படுவதால் அதை சுற்றியுள்ள கண், காது மற்றும் மூளை நரம்புகளும் பாதிக்கப்படுகிறது.

தாங்க முடியாத வலியும் இதனால் உண்டாகிறது. இந்த சிகிச்சை மிக எளிய முறையில் பழங்காலத்தில் நம் முன்னோர்கள் செய்து வந்த ஒரு ரகசிய குறிப்பாகும். அதை இப்பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தமிழ் மூலிகை வகைகளில் மிக முக்கியமான மூலிகை ‘கண்டங்கத்திரி’ எனும் மூலிகை இருக்கின்றது. கண்டங்கத்திரி மூலிகை வகை செடியில் இருக்கும் அனைத்து பாகங்களும் சிறந்த மருத்துவப் பயனை நமக்கு அளிக்கிறது. கண்டங்கத்திரியில் இருக்கும் பழுத்த காய்கள் சிறிதளவு சேகரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

கண்டங்கத்திரி விதைகளும் அல்லது பொடி வகைகளும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. கண்டங்கத்திரி காய்களை நன்றாக காயவைத்து சருகாக்கி கொள்ளுங்கள். நன்கு காய்ந்து உலர்ந்ததும் விதைகள் தனியே வந்துவிடும். அந்த விதைகளை மட்டும் தனியே வையுங்கள்.

kandankatri
kandankatri

பின்னர் நீங்கள் உபயோகிக்கும் இரும்பு சம்பந்தப்பட்ட பாத்திரம் அல்லது அறிவால் போன்ற ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இரும்பு அரிவாள் ஒன்றை எடுத்து நன்றாக சூடாக்கி கொள்ளுங்கள். சூடேறியதும் அதில் இந்த விதைகளை போட்டு விதைகள் மீது வேப்பெண்ணையை சிறிதளவு ஊற்றுங்கள்.

வாணலி சூடாக இருப்பதால் வேப்பெண்ணை ஊற்றியதும் விதைகள் பொரிந்து புகை வெளிவரும். அந்தப் புகையை சுவாசிப்பதற்கு ஒரு கொட்டாங்குச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் கண் பகுதியில் ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள்.

புகை மீது இந்த கொட்டாங்குச்சியை கவிழ்த்து வைத்தால் அந்த ஓட்டை வழியாக புகை வெளியேறுவதை பார்க்கலாம். இப்போது சொத்தைப்பல் உள்ளவர்கள் கொட்டாங்குச்சி மீது வாயை வைக்கலாம். அந்த புகை வாய் முழுவதும் பரவி சொத்தைப்பல் இருக்கும் இடத்தில் புழுக்கள் இருந்தால் அனைத்தையும் உமிழ்நீர் வழியாக வெளியேற்றிவிடும்.

இந்த முறை மிகவும் ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல பலனைத் தருவதை நீங்கள் கண்கூடாக காணலாம். சொத்தைப் பல்லில் இருக்கும் வலியை உடனே நீக்கிவிடும். அதில் இருக்கும் கிருமிகளையும் உமிழ்நீர் வழியாக முற்றிலுமாக வெளியேற்றி சுத்தம் செய்துவிடும்.

உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காத இயற்கையான பழங்கால வைத்திய முறை இது. இதுபோன்று இரண்டு நாட்கள் தொடர்ந்து செய்தாலே போதும்! சொத்தைப்பல் பிரச்சினையில் இருந்து முற்றிலுமாக நாம் நிவாரணம் பெற முடியும்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி 10 நிமிடங்கள் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் அதேபோல் சொத்தை பற்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.

தினமும் இரவில் தூங்கும் போது 2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டன் துணியில் அந்த எண்ணெயை தொட்டு இரவில் தூங்கும் போது சொத்தை பற்கள் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் சொத்தை பற்கள் விரைவில் குணமாகும்.

தினமும் காலை எழுந்தவுடன் வெதுவவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து பற்கள் துவக்கும் முன் 1 நிமிடம் வாயி கொப்பிளிக்க வேண்டும்.

இவ்வாறு தினமும் மூன்று வேலை உணவு உட்க்கொள்ளும் முன் செய்து வந்தால் பற்களில் சொத்தையில் இருந்து விடுப்படலாம்.

3-4 பூண்டு பற்கள் எடுத்து நன்றாக தட்டி அதனுடன் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து அந்த கலவையை சொத்தை பற்கள் மீது 10 நிமிடங்கள் வைத்து நன்றாக அழுத்த வேண்டும்.

இவ்வாறு தினமும் 2 முறை செய்து வந்தால் சொத்தைப் பற்களில் ஏற்படும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்படும். நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்.

மஞ்சள் தூளை சொத்தை பல் உள்ள இடத்தில் வைத்து நன்றாக தேயித்து 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் விரைவில் சொத்தைப் பல் பிரச்சனை குணமாகும்.

வேப்பிலை:
வேப்பிலை சாறை சொத்தை பற்கள் மீது தேயித்து 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் வாயை கொப்பளிக்க வேண்டும்.

3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

முடிந்தால் தினமும் காலை வேப்பங்குச்சி கொண்டு பல்துலக்கி வந்தாலும், பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

5 தொடக்கம் 7 மிளகை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிய உரல் ஒன்றில் போட்டுதட்டிக் கொள்ளுங்கள். அதனுடன் கராம்பு 1, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக தட்டிக் கொள்ளுங்கள். இதில் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள். இப்போது மருந்து தயார்.

இதனை பற்களில் வைக்க கூடாது. பல் வலி அல்லது பல் சொத்தை உள்ள இடத்தின் வெளிப்பகுதியில் வைக்க வேண்டும். அதாவது பல்லுக்கு நேராக கன்னத்தில் பூச வேண்டும். பூசி 5 தொடக்கம் 10 நிமிடம் அப்படியே வைய்யுங்கள்.

இப்போது உங்கள் பல் வலி முற்றிலும் நின்று விடும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு கலந்து வாயை கொப்பளித்து விடுங்கள். அவ்வளவு தான் பற்களில் உள்ள புழுக்கள் கொட்டுவதுடன் பல் வலியும் நின்றுவிடும்.

கடுகு எண்ணெயில் இலவங்கப்பட்டை தூளைக் கலந்து தடவி வர பற்களில் கிருமிகள் இருக்காது.

பெருங்காத்தை சூடாக்கி அதை பற்களில் தடவிட சொத்தைப் பற்கள் வராது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories