December 5, 2025, 4:13 PM
27.9 C
Chennai

திருவண்ணாமலையை ட்ரோன் மூலம் படம் பிடித்த இளைஞர்கள்! ரூ.45 ஆயிரம் அபராதம்!

thiruvanamalai
thiruvanamalai

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை உட்பட 3 மலைகளை டிரோன் மூலம் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட 2 பேருக்கு வனத்துறையினர் தலா ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

திருவண்ணாமலையில் அக்னி மலையாக உள்ளது அண்ணாமலை. 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையின் உச்சியில் கார்த்திகை தீபத் திருவிழா நாளில் மகா தீபம் ஏற்றப்படும்.

மேலும், பவுர்ணமி உட்பட அனைத்து நாட்களிலும், 14 கி.மீ., சுற்றளவு கொண்ட அண்ணாமலையை பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். மான், முயல், குரங்கு மற்றும் மயில் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்கின்றன.

இதேபோல், திருவண்ணாமலை அருகே கவுத்தி மலை மற்றும் வேடியப்பன் மலை உள்ளது. மூலிகை மரங்கள் வளர்ந்துள்ளன.

பல ஆயிரக்கணக்கான வன விலங்குகள் வாழ்கின்றன. கவுத்தி மற்றும் வேடியப்பன் மலைகள் அடிக்கடி தீப்பற்றி எரிகிறது. மலை பகுதிக்கு செல்லும் நபர்கள், தீ வைத்துவிட்டு செல்வதாக மலைகளை சுற்றியுள்ள கிராம மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் அண்ணாமலை, கவுத்தி மலை மற்றும் வேடியப்பன் மலைகளை ட்ரோன் கேமரா மூலம் படம்பிடித்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் சிலர் பதிவிட்டுள்ளனர்.

இதையறிந்த வனத்துறை உயர் அதிகாரிகள், தடை செய்யப்பட்டுள்ள மலைகளை படம் பிடித்து பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதையடுத்து, திருவண்ணாமலை வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், திருவண்ணாமலை கோபுரத் தெருவில் வசிக்கும் சரவணன் மற்றும் அருணாசலம் என்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு தலா ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்தனர். அவர்களிடமிருந்த ட்ரோன் கேமராவையும் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories