December 7, 2025, 1:49 AM
25.6 C
Chennai

குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை முயற்சி!

brintha pranitha
brintha pranitha

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் பெற்ற தாயே பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வி ( 30 ) என்பவருக்கும், இளையான்குடியை அடுத்து உள்ள குயவர்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் பிரபுவுக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு பிரசந்தா ( 4 ), பிருந்தா ( 7 ) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கே.என்.புரத்தில் தமிழ்ச்செல்வியின் தம்பி முருகன் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.

அங்கு தனது குடும்பத்தினருடன் பிரபு வசித்து வந்துள்ளார். அதன்பின் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரபு தனியாக பிரிந்து சென்றுள்ளார். இதையடுத்து தமிழ்செல்வி அங்கேயே தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி தமிழ்ச்செல்வி தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தற்போது தமிழ்ச்செல்வி திருச்சி அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

இதுகுறித்து பிரபுவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் கூறியதாவது, எனக்கும், தமிழ்ச்செல்விக்கும் கடந்து 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

நான் லாரி டிரைவர் என்பதால் வெளியூருக்கு அடிக்கடி சென்று விடுவேன். இதனால் எனது மனைவிக்கும், எனக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இரண்டு வருடத்திற்கு முன்பு அவரை பிரிந்து நான் சொந்த ஊருக்கு சென்று விட்டேன்.

இந்நிலையில் தனது மனைவி இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

மேலும் எனது மனைவியின் இந்த செயலால் தன்னுடைய இரண்டு மகள்களையும் பறிகொடுத்து விட்டேன் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories