கரும்பூஞ்சைக்கு தொற்று: தூத்துக்குடியில் முதல் உயிரிழப்பு!

corona last rites
corona last rites

கொரோனா தொற்றுக்கு ஆளாகும் சிலருக்கு கரும்பூஞ்ஜை தொற்று ஏற்படுவதாக மருத்துவர்கள் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர்

மியூகோமைகோசிஸ்’ அல்லது ‘கருப்பு பூஞ்சை தொற்று’ என்கிற அபாயகரமான நோய் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பாதித்த நபர்களிடம் தான் இது காணப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தில் ஊக்க மருந்துகளை (Steroids) அதிக அளவில் எடுத்து கொண்ட நோயாளிகளுக்கே இது பரவுகிறது என தெரிகிறது.

மிக கொடூரமான இந்த புதிய வகை தொற்றினால் உயிரிழப்புகள் 50 -70 விழுக்காடு என்பதும், பலரின் கண்களை நீக்கும் நிலையை அடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகையால் கொரோனா தொற்று உள்ளவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்துகளையும் உட்கொள்வது அபாயகரமாகிறது. எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், நீரழிவு நோய் மற்றும் புற்று நோய் உள்ள கொரோனா நோயாளிகளையே இது தாக்குகிறது.

தெலுங்கானா மாநிலமும், இந்த கரும் பூஞ்சையை கவலையளிக்கும் நோய் பரவலாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரும்பூஞ்ஜை தொற்றுக்கு முதல் நபராக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

நோயாளிகள் எண்ணிக்கை உயர்வை தொடர்ந்து ஆங்காங்கே தற்காலிகமான கொரோனா மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

கோவில்பட்டியில் வெல்டிங் பட்டரை நடத்தி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா ஏற்பட்டது. 57 வயதான இவர், உடல்நிலை மோசமானதால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கொரோனாவில் மீண்டு வராத இவர் சில தினங்களுக்கு முன் கரும் பூஞ்சை தொற்று காரணமாகவும் பாதிக்கப்பட்டார்.

கரும் பூஞ்சை தொற்று மற்றும் கொரோனா இரண்டுக்கும் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் கரும் பூஞ்சை தொற்று காரணமாக ஏற்பட்ட முதல் பலியாக இது கருதப்படுகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் முதன் முறையாக கரும்பூஞ்ஜை தொற்றக்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories