தொட்டால் சிணுங்கி இலை விரல் பட்டதும் சட்டெனத் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் இந்தத் தாவரத்தை எல்லோரும் பார்த்திருப்போம்.
உணர்வு மட்டும் அல்ல உன்னதமான மருத்துவக் குணங்களும் இந்த மூலிகைச் செடிக்கு உண்டு.
தொட்டாற்சுருங்கி, தொட்டால் வாடி, இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி என இந்தத் தாவரத்துக்கு நிறைய பெயர்கள் உண்டு.
புண்கள் குறைய: தொட்டாற்சுருங்கி இலையை உரலில் இடித்துச் சாறு எடுத்து, குழிபுண்ணில் இட்டு அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து துணியால் கட்டுப்போட்டு வர குழிப்புண் போன்ற புண்கள் குறையும்.
வயிற்று கடுப்பு குறைய: தொட்டாற் சிணுங்கி இலையை எடுத்து வெண்ணெய் போல் அரைத்து அதனுடன் தயிர் கலந்து குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும்.
இடுப்புவலி குறைய: தொட்டால் சிணுங்கி இலையை தண்ணீர் விட்டு வேக வைத்து அந்த தண்ணீரை இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி குறையும்.
சர்க்கரை நோய் குறைய: தொட்டாற் சுருங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோய் குறையும்.
உடல் குளிர்ச்சியாக: தொட்டால் சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட உடல் குளிர்ச்சியாகும்.
சிறுநீர் எரிச்சல் குறைய: தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து 10 கிராம் எடுத்து, காலையில் தயிருடன் கலந்து சாப்பிட சிறுநீர் எரிச்சல் குறையும்.
வாத வீக்கம் குறைய: தொட்டால் சிணுங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் குறையும்.
தேமல் குறைய: தொட்டாற்சுருங்கி இலைச்சாறை தேமல் மேல் பூசிவர தேமல் குறையும்.
வயிற்றுக்கடுப்பு: ஒரு கையளவு தொட்டாசிணுங்கி இலையை நன்றாக அரைத்து ஒரு குவளை தயிறுடன் கலந்து காலை உணவிற்கு முன் பருகவும்.
மூலச்சூடு குறைய: தொட்டால் சிணுங்கி வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து பசும்பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு குறையும்.
மூல நோய் குறைய: தொட்டாற் சுருங்கி இலை, நொச்சி இலை, எட்டி மர விதை, படிகாரம், வேப்பெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், தேன் மெழுகு ஆகியவற்றை களிம்பு பதத்தில் அரைத்து மூலம் உள்ள பகுதியில் பூசி வந்தால் மூல முளை குறையும்.
தொட்டால் சிணுங்கியை ஒருவர் தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உளவாற்றல் பெருகுமாம். இந்த மூலிகை காந்த சக்தி உடையது.
இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும். இந்த சூரணம் -15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு 10 கிராம் இலையை அரைத்து 5 நாள் காலை தயிரில் சாப்பிட குணமாகும்.
ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.
இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும், உடல் குளிர்ச்சியாகும், வயிற்றுப்புண்ணும் ஆறும், சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
தொட்டா சிணுங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோய் குறையும்.
மாதவிடாயின்போது ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முழுச்செடியையும் இடித்து சாறு எடுத்து, 4 தேக்கரண்டி சாற்றுடன், தேன் கலந்து மூன்று வேளையும் குடிக்கவேண்டும் அல்லது ஒரு கைப்பிடி அளவு இலைகளுடன் சிறிதளவு சீரகம் வெங்காயத்தைச் சேர்த்து அரைத்து எலுமிச்சை அளவு சாப்பிடவேண்டும்.
பெண்களுக்கு ஏற்படும் உதிரப் பெருக்கு என்கின்ற பெரும்பாடு நோய் தீரவேண்டுமானால் தொட்டால் சுருங்கி இலையைப் பறித்து சுத்தம் செய்து, அவ்விலையோடு தேவையான அளவில் சிறுவெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து பசு மோரில் கலந்து பெண்கள் அருந்த நோய் குணமாகும்.
தொட்டா சிணுங்கி ஒருபிடி எடுத்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி காலை, மாலை குடித்துவர பேர்களின் மார்பக கட்டி கரையும்
தொட்டா சிணுங்கியை பசையாக்கி கட்டிகள் இருக்கும் இடத்தில் மேல்பூச்சாக போட்டு 2 மணி நேரத்துக்குபின் கழுவிவர மார்பக கட்டிகள் கரையும்.
கிருமி நாசினி :
வீக்கத்தை கரைத்து வலியை குறைக்கும் தன்மை கொண்டது. பூஞ்சை காளான்களை போக்க கூடியது. நுண்கிருமிகளை அகற்றும் தன்மை உடையது.
கருப்பை பாதுகாப்பு :
உள் அழற்சியை போக்கும். கருப்பையில் ஏற்படும் வீக்கம், வலியை சரிசெய்யும். வெள்ளைபோக்கு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்தக்கசிவுக்கு மருந்தாகிறது
மேனியில் ஏற்படும் படை, தேமல் போன்ற நோய்கள் நீண்ட நாள் இருந்து தொல்லை கொடுக்கும் வேளையில் இவ்விலையைப் பறித்து வந்து அதில் சாறு எடுத்து அதை நோய் மீது தடவ விரைவில் குணமாகும்.
கை, கால், மூட்டு வீக்கம், ஒவ்வாமை, தோல் தடிப்புகள் குணமாக, தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வர குணமாகும்.
காக்கா வலிப்பு, பக்கவாதம், முகத்தில் ஏற்படும் வாதம் உள்ளிட்டவை எல்லாம் நம் உடலில் உள்ள communication சிஸ்டத்தில் ஏற்படும் பாதிப்பே. இவற்றை எல்லாம் போக்கவல்லது தொட்டா சிணுங்கி. உடலில் உள்ள தேவை இல்லாத நஞ்சுகளை நீக்கி புண்களை ஆற்ற கூடியது.
தொட்டா சிணுங்கி இலையின் சாற்றை சிறிது எடுத்து குழிப்புண்களில் விட்டு, ஒரு வெற்றிலையை காயத்தின் மீது வைத்து துணியால் கட்டுப்போட்டு வர, லேசில் ஆறாத நாள்பட்ட குழிப்புண்கள் கூட விரைவில் ஆறி விடும் என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள். கை, கால் மூட்டு வீக்கம், அலர்ஜி, தோல் தடிப்புகள் குணமாக, தொட்டா சிணுங்கி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் நல்ல பலனை பெறலாம்.
குழந்தைப்பேறு பிரச்சனை,
ஆண்மைகுறைபாடு உள்ளிட்ட நோய்களுக்கு சிறந்த மருத்துவ மூலிகையாக விளங்குகிறது சிணுங்கி செடி ஆண்மை குறைபாடு
உள்ளவர்கள் தொட்டாற் சுருங்கி அரைத்து 15 கிராம் அளவு எடுத்து கொண்டு, பாலில் கலந்து சாப்பிட்டு வர தீர்வு கிடைக்கும்
ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு நீரை எடுத்து கொண்டு அதில் தொட்டா சிணுங்கி இலையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி விட வேண்டும். நாளொன்றுக்கு 2 முதல் 3 வேளை அந்த நீரை குடித்து வந்தால் கல் அடைப்பு குணமாகும்..
உள்ளுக்குச் சிறிது தொட்டாற்சிணுங்கி சூரணத்தைப் பாலுடன் சாப்பிட, எரிச்சல் அடங்கும். மூச்சுவிட சிரமமான நிலைகளில் தொட்டாற்சிணுங்கி சூரணத்தை தேன் குழைத்துச் சாப்பிட, மூச்சுக் குழாய்விரியும்.
அரிசி கழுவிய நீருடன் தொட்டாற்சிணுங்கி செடியை அரைத்துக் குடித்தால் பாம்பு விஷம் இறங்கும்.
தொட்டாச்சிணுங்கி பூக்கள்
தொட்டாச் சிணுங்கி என்ற முள் கொடியில் தொட்டால் சிணுங்கிப் பூ கிடைக்கும். தொட்டவுடன் இந்தக் கொடியின் இலைகள் சுருங்கிவிடும்.தொட்டாச்சிணுங்கி வேர் என்பவற்றிற்கு புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பது சித்த மருத்துவர்களது கூற்றாகும். மனிதர்களுக்கு மட்டுமன்றி கால்நடைகளுக்கும் ஏற்படுகின்ற பல நோய்கள் இப்பூவினால் குணமாகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.