புளியங்குடி டிஎஸ்பி சுவாமிநாதன் கொரோனாவால் மரணம்: தென்காசி மாவட்ட போலீஸார் கண்ணீர் அஞ்சலி!

puliyangudi swaminathan
puliyangudi swaminathan

தென்காசி மாவட்டம், புளியங்குடி டிஎஸ்பி சுவாமிநாதன் இன்று காலை மரணம் அடைந்தார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 15 நாட்களாக நெல்லை ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை மரணம் அடைந்தார். இவருக்கு வயது 48 கடந்த வருடம் செப்டம்பர் மாதம்தான் புளியங்குடியில் டிஎஸ்பி ஆக பதவி ஏற்றார். சுவாமிநாதன் மறைவுக்கு தென்காசி மாவட்ட போலீஸார் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

puliyangudi dsp swamithan
puliyangudi dsp swamithan

இது குறித்து தென்காசி மாவட்ட போலீஸார் தெரிவித்ததாவது…

கொரோனா தொற்றின் காரணமாக திரு. ச.சுவாமிநாதன், துணை காவல் கண்காணிப்பாளர், புளியங்குடி அவர்கள் மறைவுதென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்டத்தில் கடந்த 14.09.2020 முதல் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த திரு. சுவாமிநாதன் அவர்கள் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக திருநெல்வேலியில் உள்ள SHIFA தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று (02.06.2021) காலை சுமார் 09.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

அவர்களது உடல் அவரின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுண சிங் IPS, தென்காசி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. கோகுலகிருஷ்ணன், சாத்தூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. ராமகிருஷ்ணன், திரு. குப்புசாமி, DSP SBCID, தென்காசி மற்றும் விருதுநகர் மாவடட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்துபோன திரு. சுவாமிநாதன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கலிவரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கலிவரதன் அவர்கள் “கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக நாம் ஒரு நல்ல காவல்துறை அதிகாரியை இழந்துவிட்டோம். அவர் விட்டுச் சென்ற காவல்பணியை மேற்கொள்ள வேண்டியது நமது கடமை.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

கொரோனா நோய்த் தொற்று காலத்தில் முன் களப்பணியாளர்களாக பணிபுரிந்து வரும் நாம் அனைவரும் பணிபுரியும் இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிவதுடன் பாதுகாப்பான முறையில் பணியாற்ற வேண்டும் எனவும், கண்டிப்பாக அனைவரும் அரசு உத்தரவின்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இறந்துபோன காவல் துணைக் கண்காணிப்பாளரின் குடும்பத்திற்கு காவல்துறையினர் உறுதுணையாக இருக்க வேண்டுமென்றும், காவல்துறையில் ஏற்பட்ட கடைசி மரணமாக நமது காவல் துணைக் கண்காணிப்பாளரின் மரணம் இருக்க வேண்டுமென்றும், ஆகவே பொதுமக்களை காக்கும் பணியுடன் சேர்த்து காவல்துறையினர் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் DCRB துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. கணேஷ், நிர்வாக அலுவலர் திரு. ஹரிராம், மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தி அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மற்றும் உட்கோட்ட காவல் அலுவலகங்களிலும் இறந்துபோன திரு. சுவாமிநாதன், காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

கடந்த 1997ம் வருடம் சார்பு ஆய்வாளராக பணியில் சேர்ந்த திரு. சுவாமிநாதன் அவர்கள் கடந்த 2020ம் வருடம் துணைக் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.

திரு. சுவாமிநாதன் அவர்களுக்கு திருமதி. யமுனா என்ற மனைவியும், சஹானா(13), சாதனா (12) மற்றும் சந்தோஷ் (09) ஆகிய குழந்தைகளும் அவரது சொந்த ஊரான சாத்தூரில் வசித்து வருகின்றனர்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories