December 6, 2025, 1:04 AM
26 C
Chennai

யூடுயூப் பார்த்து சாராயம் காய்ச்சிய நபர்! கைது!

Counterfeit alcohol
Counterfeit alcohol

ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் பெரிய புதூர் பகுதியில் வசிக்கும் சிலர் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனால் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் முத்தழகன் என்ற கூலித்தொழிலாளியின் வீட்டில் சோதனை செய்தபோது அவர் சாராய ஊறல் போட்டது தெரியவந்துள்ளது.

மேலும் காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது தந்தை பழங்கள் வியாபாரம் செய்து வருவதாகவும் அதிலிருந்து மீதமான பழங்களை வைத்து சாராய ஊறல் போடுவதற்கான வழிமுறைகளை யூடியூப் பார்த்து தெரிந்து கொண்டதாகவும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

மேலும் கூலி தொழிலாளியான முத்தழகனை கைது செய்ததோடு, காவல்துறையினர் சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்ட 10 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சேலம் பெருமாகவுண்டம்பட்டி கிராமத்தில் சாராயம் காய்ச்சி விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அங்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டரான சந்திரகலா தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பூபதி என்னும் கல்லூரி மாணவன் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்ததுள்ளது.

இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் ஊரடங்கு காலத்தில் போதிய வருமானம் இல்லாததினாலும், தனது தந்தை கூலி தொழிலாளி என்பதனாலும், குடும்ப வறுமை காரணமாக இவ்வாறு சாராயம் காய்ச்சுவதாக அந்த இளைஞர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 15 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories