யூடுயூப் பார்த்து சாராயம் காய்ச்சிய நபர்! கைது!

Counterfeit alcohol
Counterfeit alcohol

ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் பெரிய புதூர் பகுதியில் வசிக்கும் சிலர் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனால் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் முத்தழகன் என்ற கூலித்தொழிலாளியின் வீட்டில் சோதனை செய்தபோது அவர் சாராய ஊறல் போட்டது தெரியவந்துள்ளது.

மேலும் காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது தந்தை பழங்கள் வியாபாரம் செய்து வருவதாகவும் அதிலிருந்து மீதமான பழங்களை வைத்து சாராய ஊறல் போடுவதற்கான வழிமுறைகளை யூடியூப் பார்த்து தெரிந்து கொண்டதாகவும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

மேலும் கூலி தொழிலாளியான முத்தழகனை கைது செய்ததோடு, காவல்துறையினர் சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்ட 10 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சேலம் பெருமாகவுண்டம்பட்டி கிராமத்தில் சாராயம் காய்ச்சி விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அங்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டரான சந்திரகலா தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பூபதி என்னும் கல்லூரி மாணவன் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்ததுள்ளது.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் ஊரடங்கு காலத்தில் போதிய வருமானம் இல்லாததினாலும், தனது தந்தை கூலி தொழிலாளி என்பதனாலும், குடும்ப வறுமை காரணமாக இவ்வாறு சாராயம் காய்ச்சுவதாக அந்த இளைஞர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 15 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories