வெயில், கூட்டம்.. தடுப்பூசிக்காக வரிசையில் நின்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாபம்!

vallikannu
vallikannu

தஞ்சாவூர் மாவட்டத்தில் 67 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடைபெற்றது. அதன்படி, கும்பகோணம் பகுதியில் உள்ள காரனேசன் மருத்துவமனை, யானையடி நகராட்சி பள்ளி, மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல், மேலக்காவேரி பள்ளிவாசல், சரஸ்வதி பாடசாலை பள்ளி உள்ளிட்ட இடங்களில் நேற்று முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

5 நாட்களுக்குப் பிறகு தடுப்பூசி செலுத்தப்படுவதால், இந்த மையங்களில் நேற்று காலை முதலே நூற்றுக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள திரண்டனர். இதனால், அந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கும்பகோணம் காரனேசன் மருத்துவமனையில் நேற்று காலை தடுப்பூசி செலுத்துவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த கும்பகோணம் லக்ஷ்மிநாராயணன் தெருவைச் சேர்ந்த முரளி என்பவரின் மனைவி வள்ளிக்கண்ணு(40) திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக, பணியில் இருந்த மருத்துவர்கள், அவரை பரிசோதித்தனர். இதில், அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

இதைஅடுத்து, அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கும்பகோணம் நகர் நல அலுவலர் மருத்துவர் பிரகாஷிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: கும்பகோணம் காரனேசன் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 250 பேர் முன்கூட்டியே டோக்கன் பெற்றிருந்தனர்.

இதில் வள்ளிக்கண்ணு என்பவர் 188-வது டோக்கன் பெற்றிருந்தார். வரிசையில் நின்று கொண்டு இருந்த அவர் மயங்கி விழுந்ததும், உடனடியாக மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர். அதில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது.

அவர்களது உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டு வள்ளிக்கண்ணுவின் உடலைப் பெற்றுச் சென்றனர் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories