மூன்றாவது அலைக்கு முன்னெச்சரிக்கை: 14 வயதிற்கு கீழ் குழந்தைகள் உள்ள பெற்றோர்களுக்கு வேண்டுகோள்!

vaccine - 2026

மூன்றாவது அலையை எதிர்கொள்ள 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

வேலூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் ஸ்ரீ ஜெயின் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமை, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக வெல்லம் வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.25 ஆயிரமும், இரும்புக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.5 ஆயிரமும், மீன், இறைச்சி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.60 ஆயிரமும், பேரணாம்பட்டு அனைத்து வணிகர் சங்கம் சார்பில் ரூ.50 ஆயிரமும், வேலூர் நேதாஜி காய்கனி வணிகர் சங்கம் சார்பில் ரூ.55 ஆயிரமும், வேலூர் ஜெயின் சங்கம் சார்பில் ரூ.21 ஆயிரம் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் வழங்கப்பட்டது.

அப்போது, மாவட்ட ஆட்சியர் பேசும்போது, ”வேலூர் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முதல் அலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனைப்படி பெரும் உயிர் இழப்புகளை தவிர்த்தோம். இரண்டாவது அலையில் பெரிதும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளது. வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில், குழந்தைகளை பாதுகாக்க 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கட்டாயமாக கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டு மூன்றாவது அலையை எதிர் கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாநகர நல அலுவலர் சித்ரசேனா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணி வண்ணன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஞானவேலு, ஜெயின் சங்கத் தலைவர் ருக்ஜி ராஜேஷ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories