மூன்றாவது அலைக்கு முன்னெச்சரிக்கை: 14 வயதிற்கு கீழ் குழந்தைகள் உள்ள பெற்றோர்களுக்கு வேண்டுகோள்!

vaccine - 2026

மூன்றாவது அலையை எதிர்கொள்ள 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

வேலூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் ஸ்ரீ ஜெயின் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமை, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக வெல்லம் வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.25 ஆயிரமும், இரும்புக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.5 ஆயிரமும், மீன், இறைச்சி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.60 ஆயிரமும், பேரணாம்பட்டு அனைத்து வணிகர் சங்கம் சார்பில் ரூ.50 ஆயிரமும், வேலூர் நேதாஜி காய்கனி வணிகர் சங்கம் சார்பில் ரூ.55 ஆயிரமும், வேலூர் ஜெயின் சங்கம் சார்பில் ரூ.21 ஆயிரம் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் வழங்கப்பட்டது.

அப்போது, மாவட்ட ஆட்சியர் பேசும்போது, ”வேலூர் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

முதல் அலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனைப்படி பெரும் உயிர் இழப்புகளை தவிர்த்தோம். இரண்டாவது அலையில் பெரிதும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளது. வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில், குழந்தைகளை பாதுகாக்க 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கட்டாயமாக கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டு மூன்றாவது அலையை எதிர் கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாநகர நல அலுவலர் சித்ரசேனா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணி வண்ணன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஞானவேலு, ஜெயின் சங்கத் தலைவர் ருக்ஜி ராஜேஷ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories