மோடி அரசின் திட்டங்களை விளக்கி விவசாயிகளுக்கு கடிதம்: அண்ணாமலை அறிவிப்பு!

annamalai bjp leaders farmers
annamalai bjp leaders farmers

பிரதமரின் நிதி உதவி பெறும் 38 லட்சம் தமிழக விவசாயிகளுக்கு அரசின் திட்டங்களை விளக்கி கடிதம் எழுதப்படுகிறது. மேலும், உழவருடன் ஒரு நாள் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக, பாஜக., தொண்டர்கள் வரும் 25ஆம் தேதி முழுதும் விவசாயிகளை சந்தித்துப் பேசுகின்றனர்” என தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பாஜக., சார்பில் மத்திய அரசின் விவசாய திட்டங்கள் வேளாண் சட்டங்கள் தொடர்பான தமிழ் கையேட்டை சென்னையில் நேற்று தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டார். இந்த கையேட்டை, விவசாயிகள் பெற்றுக் கொண்டனர்.

அப்போது அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு வழங்கும் திட்டங்களும், சலுகைகளும் சுதந்திர இந்தியாவில் இதுவரை யாரும் செய்ததில்லை. நேற்று மட்டும் நாடு முழுதும் 9.50 கோடி விவசாயிகளுக்கு ‘பி.எம்., கிசான்’ திட்டத்தின் கீழ் ஒன்பதாவது தவணையாக, அவர்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.2 ஆயிரம் என 19 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இது ஒரு சரித்திர சாதனை. இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்திலும் 38 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.

bjp planed to write letters to tn farmers
bjp planed to write letters to tn farmers

அவ்வாறு மோடி அரசின் திட்டங்களால் பயனடைந்துள்ள 38 லட்சம் விவசாயிகளுடன், தமிழக பாஜக.,வினர், வரும் 25ஆம் தேதி ஒருநாள் முழுதும் செலவிட திட்டமிட்டுள்ளனர். அந்த நாளை ‘உழவருடன் ஒரு நாள்’ என்று அழைக்கிறோம்.

விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்களைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி விவசாயிகளுக்கு என்ன செய்துள்ளார்; குறிப்பாக தமிழக விவசாயிகளுக்கு என்ன செய்துள்ளார் என்ற விவரங்கள் அடங்கிய கடிதம் அவர்களுக்கு வழங்கப்படும்.

இதன் மூலம் அவர்களுடன் காலம் முழுதும் நீடிக்கக் கூடிய உறவு ஏற்படுத்தப்படும். மத்தியில் பாஜக., அரசு பொறுப்பேற்ற பிறகுதான் 23 விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது. அதற்கு முன் இரண்டு பொருட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இப்போது மத்திய அரசின் அனைத்து வேளாண் திட்டங்களும் இடம்பெற்றுள்ள புத்தகத்தை வெளியிட்டுள்ளோம். இது பாஜக., விவசாய அணி சார்பில், விவசாய சங்கங்கள், வேளாண் உற்பத்தி சங்கங்களிடமும் நேரடியாக கொடுக்கப்படும்… என்றார் அண்ணாமலை.

பாஜக @bjpkm_tn சார்பில் மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்களை விளக்கும் கையேடு இன்று கமலாலயத்தில், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் திரு @blsanthosh அவர்களால் வெளியிடப்பட்டது. பிரதமரின் நிதி உதவி பெறும் 38 லட்சம் தமிழக விவசாயிகளுக்கு அரசின் திட்டங்களை விளக்கி கடிதம் எழுதப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories