சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி!

airport-Chennai
airport-Chennai

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனைக்காக ஆன்லைன் முன்பதிவு வசதி என்ற புதிய முறையை சென்னை விமான நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கும், அதேபோல வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை சான்றிதழ்கள் கண்டிப்பாக தேவை என்று சுகாதார துறை அறிவித்துள்ளது.

இதையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைக்கான மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் வரை 10க்கும் குறைவான சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

தற்போது 15க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில், பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதனால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யும் கவுன்டர்களில் கூட்டம் அதிகரித்து நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதை தவிர்க்க பயணிகளின் வசதிக்காக புதிய முறையை சென்னை விமான நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனைக்காக வரும் பயணிகள் முன்னதாகவே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான க்யூஆர் கோடு சென்னை விமான நிலைய ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

அதில் முன்பதிவு செய்து கொண்ட பயணிகளுக்கு, நேரம் ஒதுக்கப்பட்டு விடும். அந்த நேரத்தில் பயணிகள் வந்து, வரிசையில் நிற்காமல் உடனடியாக பரிசோதனையை முடித்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஏற்பாட்டால் பயணிகள் பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories