தாய் கொடுத்த பாலைக் குடித்த குழந்தைகள் உயிரிழப்பு!

jeyakanth jeyavishnu
jeyakanth jeyavishnu

பாலமுருகன் என்ற நபர், புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சேத்தூர் கிராமத்தில் உள்ள காமாட்சி நகரை சேர்ந்தவர்.

இவருக்கு 26 வயதான பிரியா என்ற மனைவி, 4 வயதான ஜெய்காந்த், 3 வயதான ஜெய்விஷ்ணு ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

தற்போது, பாலமுருகன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், பிரியா தனது குழந்தைகளுடன் தனியாக சேத்தூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று, பிரியா தனக்கும் குழந்தைகளுக்கும் சேர்த்து மாலையில் பால் காய்ச்சி உள்ளார்.

அப்போது கவனக்குறைவாக இருந்த பிரியா, பாலில் நாட்டு சர்க்கரைக்கு பதிலாக எலி மருந்தை கலந்து காய்ச்சி உள்ளார். பின்னர் அதை தனது குழந்தைகள் இருவருக்கும் கொடுத்து விட்டு மீதம் உள்ள பாலை பிரியா குடித்ததாக கூறப்படுகிறது

அன்று இரவு குழந்தைகள் இருவரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். தொடர்ந்து பிரியாவும் மயங்கி விழுந்துள்ளார். இதனை அறிந்த பிரியாவின் உற

வினர் ரேவதி மற்றும் அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் திருநள்ளாறு சமுதாய நலவழி மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதை அடுத்து, தொடர்ந்து அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளும் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பிரியா கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகாரிக்காபட் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியாவே எலி மருந்து கலந்த பாலை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தானும் குடித்தாரா? அல்லது உண்மையிலேயே கவனக்குறைவாக இந்த சம்பவம் நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம், சேத்தூர் கிராம மக்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories