February 22, 2026, 7:22 PM
29 C
Chennai

நேற்று வரை முனியாண்டி விலாஸ்; இன்று கோயில் மடைப்பள்ளி! டரியல் ஆன விடியல்!

hrnce office e1561694728558
hrnce office e1561694728558

தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி முதல் கட்டமாக தமிழகம் எங்கும் பல கோவில்களில் புதிய பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த வகையில் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இரண்டு மடைப்பள்ளி சிப்பந்திகளும், தெப்பக்குளம் நாகநாதசுவாமி கோவிலில் ஒரு அர்ச்சகரும், குமார வயலூர் முருகன் கோவிலில் 3 அர்ச்சகர்களும், ஓர் ஓதுவாரும், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 3 அர்ச்சகர்களும் சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் வரும் கோவில்களான ஆதி மாரியம்மன் கோவிலுக்கு 2 அர்ச்சகர்களும் மாகாளிக்குடி உஜ்ஜயினி காளி அம்மன் கோயிலுக்கு ஒரு அர்ச்சகரும், முக்தீஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

hrnce appointment
hrnce appointment

புதிய பணியாளர்கள் பொறுப்பேற்க வந்த நிலையில் அந்தந்தக் கோயில் நிர்வாக அதிகாரிகள் திங்கள் காலை கோயிலுக்கு அவர்களை அழைத்து வந்து மற்ற பணியாளர்களிடம் அறிமுகம் செய்து வைத்தனர். ஆனால் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்ற அதிருப்தி, கோயில் பணியாளர்களிடம் ஏற்பட்டுள்ளது!

இதுகுறித்து கோயில் பணியாளர்களிடம் விசாரித்தபோது, ஒரு கோயிலில் மடைப்பள்ளிக்கு பணியமர்த்தப்பட்டுள்ள நபர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை அசைவ கடையில் பணியாற்றியுள்ளார்; அவரை மடைப்பள்ளி சமையல் செய்ய எப்படி அனுமதிக்கலாம் என ஒரு பிரிவு அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அதிருப்தி வெளியிட்ட அவர்கள், போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி கேட்டு சென்றுள்ளனர். இதற்கு இடையே சிவாச்சாரியார்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், எனவே போராட்டத்தை ஒத்திவைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்!

இதுபோன்ற பிரச்சனைகளால் சில கோயில்களில் குழப்பமான சூழ்நிலை காணப்படுகிறது!

இந்நிலையில் இந்தச் செய்தி சமூகத் தளங்களில் வைரலானது. இது குறித்து கருத்து வெளியிட்ட சமூகத் தள வாசிகள், கோயில்களின் ஆசாரங்களை அழித்து, இந்து ஆலய மக்கள் செண்டிமெண்ட்களை வேண்டுமென்றே அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்ள்நோக்கமே அரசுக்கு இருப்பதாகக் கூறுகின்றனர்.

கோயில் வாசலில் இறைச்சித் துண்டுகளை வீசி எறிந்து பதற்றத்தை உருவாக்க நினைக்கும் சமூக விரோதிகளின் செயலுக்கு எவ்விதத்திலும் குறைவு இல்லாதது, மாநில அரசின் அறநிலையத்துறையின் செயல்பாடு என்று குறிப்பிடும் அவர்கள், அந்த சமூக விரோதிகளுக்கு அரசு தண்டனை தரலாம், ஆனால் அரசு சமூக விரோதியானால் யார் தண்டனை தருவது என்று குறிப்பிட்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories