நேற்று வரை முனியாண்டி விலாஸ்; இன்று கோயில் மடைப்பள்ளி! டரியல் ஆன விடியல்!

hrnce office e1561694728558
hrnce office e1561694728558

தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி முதல் கட்டமாக தமிழகம் எங்கும் பல கோவில்களில் புதிய பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த வகையில் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இரண்டு மடைப்பள்ளி சிப்பந்திகளும், தெப்பக்குளம் நாகநாதசுவாமி கோவிலில் ஒரு அர்ச்சகரும், குமார வயலூர் முருகன் கோவிலில் 3 அர்ச்சகர்களும், ஓர் ஓதுவாரும், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 3 அர்ச்சகர்களும் சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் வரும் கோவில்களான ஆதி மாரியம்மன் கோவிலுக்கு 2 அர்ச்சகர்களும் மாகாளிக்குடி உஜ்ஜயினி காளி அம்மன் கோயிலுக்கு ஒரு அர்ச்சகரும், முக்தீஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

hrnce appointment
hrnce appointment

புதிய பணியாளர்கள் பொறுப்பேற்க வந்த நிலையில் அந்தந்தக் கோயில் நிர்வாக அதிகாரிகள் திங்கள் காலை கோயிலுக்கு அவர்களை அழைத்து வந்து மற்ற பணியாளர்களிடம் அறிமுகம் செய்து வைத்தனர். ஆனால் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்ற அதிருப்தி, கோயில் பணியாளர்களிடம் ஏற்பட்டுள்ளது!

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இதுகுறித்து கோயில் பணியாளர்களிடம் விசாரித்தபோது, ஒரு கோயிலில் மடைப்பள்ளிக்கு பணியமர்த்தப்பட்டுள்ள நபர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை அசைவ கடையில் பணியாற்றியுள்ளார்; அவரை மடைப்பள்ளி சமையல் செய்ய எப்படி அனுமதிக்கலாம் என ஒரு பிரிவு அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அதிருப்தி வெளியிட்ட அவர்கள், போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி கேட்டு சென்றுள்ளனர். இதற்கு இடையே சிவாச்சாரியார்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், எனவே போராட்டத்தை ஒத்திவைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்!

இதுபோன்ற பிரச்சனைகளால் சில கோயில்களில் குழப்பமான சூழ்நிலை காணப்படுகிறது!

இந்நிலையில் இந்தச் செய்தி சமூகத் தளங்களில் வைரலானது. இது குறித்து கருத்து வெளியிட்ட சமூகத் தள வாசிகள், கோயில்களின் ஆசாரங்களை அழித்து, இந்து ஆலய மக்கள் செண்டிமெண்ட்களை வேண்டுமென்றே அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்ள்நோக்கமே அரசுக்கு இருப்பதாகக் கூறுகின்றனர்.

கோயில் வாசலில் இறைச்சித் துண்டுகளை வீசி எறிந்து பதற்றத்தை உருவாக்க நினைக்கும் சமூக விரோதிகளின் செயலுக்கு எவ்விதத்திலும் குறைவு இல்லாதது, மாநில அரசின் அறநிலையத்துறையின் செயல்பாடு என்று குறிப்பிடும் அவர்கள், அந்த சமூக விரோதிகளுக்கு அரசு தண்டனை தரலாம், ஆனால் அரசு சமூக விரோதியானால் யார் தண்டனை தருவது என்று குறிப்பிட்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories