கோபுரத்தில் இடி விழுந்து உடைந்த சிற்பங்கள்!

Published:

kovil
kovil

கோபுரத்தின் சிற்பங்கள் மீது இடி விழுந்து சேதம் ஏற்பட்ட காரணத்தினால் கோவில் மூடப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் இடியுடன் பலத்த கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் திருமால் நகரில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவிலின் கோபுரத்தின் மீது இடி விழுந்துள்ளது.

அதனால் கோபுரத்தில் இருக்கும் சிற்பங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அக்கோவிலில் சுற்றியிருக்கும் வீடுகளில் இடியால் மின் சாதன பொருட்கள் அனைத்தும் பழுதடைந்துள்ளது.

அதன்பின் இடி காரணத்தினால் சிற்பங்கள் சேதம் அடைந்ததால் கோவில் மூடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் கூறும் போது முத்துமாரியம்மன் கோவில் கோபுரத்தின் மீது இடி விழுந்ததால் சிற்பங்கள் சேதம் அடைந்ததினால் அதை சீரமைத்த பிறகு தான் கும்பாபிஷேகம் செய்து கோவிலை திறக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img