குழந்தையை அடித்து வீடியோ அனுப்பு.. கள்ளக்காதலன் கட்டளையால் காட்டுமிராண்டி ஆன தாய்!

Published:

Tulasi
Tulasi

செஞ்சியை அடுத்த மணலப்பாடி மதுரா மோட்டூர்கிராமத்தில் வசித்து வரும் வடிவழகனின்இரண்டாவது மகன் பிரதீப்பை அவரது தாய் துளசி கொடூரமாக தாக்கி உள்ளார்.

இந்த சம்பவம் வீடியோ வைரலாக பரவியதை அடுத்து போலிஸார் துளசியை ஆந்திராவில் நேற்று கைது செய்து அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

முன்னதாக கைது செய்யப்பட்டுள்ள துளசி விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு நேற்று அதிகாலை 5.15 மணிக்கு தனிப்படை போலிஸார் அழைத்துவந்தனர்.

சத்தியமங்களம் காவல் நிலையத்தில் செஞ்சி டி.எஸ்.பி தலைமையில் துளசியிடம் மகளிர் உள்ளிட்ட போலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது தாய் துளசியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ,

துளசியும் அவரது கணவரும் சென்னையில் வசித்தபோது பிரேம்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தபழக்கம் வீடியோகால் மூலமாக காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் துளசியிடம் ஆசை வார்த்தையில் பேசிய பிரேம்குமார், கணவரை விட்டுவிட்டு வரும் படி கூறியுள்ளார். அப்படி வந்தபிறகு துளசியை திருமணம் செய்து கொள்வதாகவும் பிரேம்குமார் கூறியுள்ளான்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

அதுமட்டுமல்லாது, வீடியோ காலில் பேசும் போது துளசியிடம் பெரிய மகன் உன்னை போன்று இருப்பதாகவும், இளையமகன் துளசியின் கணவரை போல் இருப்பதாகவும், மேலும் குறைமாதத்தில் பிறந்த இரண்டாவது மகனை அடித்து துன்புறுத்த வலியுறுத்தியதாகவும், அதனை வீடியோவாக எடுத்து எனக்கு அனுப்பினால் தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளான்.

இதன்படியே துளசியும் தனது இளைய மகனை அடித்து அதனை வீடியோவாக எடுத்து அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் துளசிக் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது காதலன் பிரேம்குமாரை போலிஸார் கைது செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி பிரேம்குமார் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, போலிஸார் சென்னைக்கு விரைந்துள்ளனர். இந்நிலையில், பிரேம்குமார் செல்போன் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் என வருவதாகவும் கூறப்பட்டுகிறது. விரைவில் போலிஸார் பிரேம்குமாரை கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img