கோயில், வீடு என கொள்ளையிட்டு வந்த பிளம்பர் கைது!

anish
anish

கன்னியாகுமரி மாவட்டத்தில் பூட்டிய கோயில் மற்றும் வீடுகளை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட பிளம்பர் கைது.
அவரிடம் இருந்து 600-கிலோ வெண்கல பொருட்கள் மற்றும் தங்க நகைகள் மீட்கப்பட்ட நிலையில், கூட்டாளிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் கோயில் மற்றும் வீடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் தங்க நகைகள் குத்துவிளக்கு உள்ளிட்ட வெண்கலத்தாலான கோயில் பூஜை பொருட்களை கொள்ளையடித்து செல்வது தொடர்கதையாக இருந்த நிலையில் கொள்ளையர்களை கண்காணித்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.

anish case
anish case

இந்நிலையில், ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் குத்துவிளக்கு மற்றும் பூஜை பொருட்கள் திருடுபோன நிலையில், போலீசார் அந்த கோயிலை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் பொருட்களை திருடி சென்றது பதிவாகி இருந்தது.

இதனையடுத்து ஆசாரிப்பள்ளம் குளச்சல் பிரதான சாலையில் முக்கிய சந்திப்பு பகுதிகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அந்த மர்ம கும்பல் அந்த வழியாக வந்து இறுதியில் சடையால்புதூர் பகுதியில் ஒரு வீட்டிற்குள் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்த நிலையில், அந்த வீட்டை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.

anish 1
anish 1

அப்போது அங்கு தூங்கி கொண்டிருந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த அனிஷ்ராஜன் என்பதும், இவர் பிளம்பராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அனிஷ்ராஜனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 600-கிலோ எடையுள்ள வெண்கல பொருட்கள் தங்க நகைகள் டிவி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததோடு அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்து தலைமறைவான அவனது கூட்டாளிகள் மூன்று பேரை வலைவீசி தேடி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories