கோயில், வீடு என கொள்ளையிட்டு வந்த பிளம்பர் கைது!

anish
anish

கன்னியாகுமரி மாவட்டத்தில் பூட்டிய கோயில் மற்றும் வீடுகளை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட பிளம்பர் கைது.
அவரிடம் இருந்து 600-கிலோ வெண்கல பொருட்கள் மற்றும் தங்க நகைகள் மீட்கப்பட்ட நிலையில், கூட்டாளிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் கோயில் மற்றும் வீடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் தங்க நகைகள் குத்துவிளக்கு உள்ளிட்ட வெண்கலத்தாலான கோயில் பூஜை பொருட்களை கொள்ளையடித்து செல்வது தொடர்கதையாக இருந்த நிலையில் கொள்ளையர்களை கண்காணித்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.

anish case
anish case

இந்நிலையில், ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் குத்துவிளக்கு மற்றும் பூஜை பொருட்கள் திருடுபோன நிலையில், போலீசார் அந்த கோயிலை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் பொருட்களை திருடி சென்றது பதிவாகி இருந்தது.

இதனையடுத்து ஆசாரிப்பள்ளம் குளச்சல் பிரதான சாலையில் முக்கிய சந்திப்பு பகுதிகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அந்த மர்ம கும்பல் அந்த வழியாக வந்து இறுதியில் சடையால்புதூர் பகுதியில் ஒரு வீட்டிற்குள் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்த நிலையில், அந்த வீட்டை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.

anish 1
anish 1

அப்போது அங்கு தூங்கி கொண்டிருந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த அனிஷ்ராஜன் என்பதும், இவர் பிளம்பராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அனிஷ்ராஜனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 600-கிலோ எடையுள்ள வெண்கல பொருட்கள் தங்க நகைகள் டிவி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததோடு அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்து தலைமறைவான அவனது கூட்டாளிகள் மூன்று பேரை வலைவீசி தேடி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories