கொரோனா தடுப்பூசி போட போன நபருக்கு.. ரேபிஸ் தடுப்பூசி.. 2 பேர் சஸ்பெண்ட்!

vaccine - 2026

தடுப்பூசிக்கு பதிலாக, ஒருவருக்கு ரேபிஸ் நாய் தடுப்பூசி போட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட டாக்டர், நர்ஸ் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகராட்சிக்கு உட்பட்ட கல்வா என்ற பகுதியில் ஆட்கோனேஷ்வர் சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது.

மேலும் தடுப்பூசி முகாமும் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையும், முகாமும் ஒன்றாகவே இயங்கி வருகிறது. அதனால், இங்கேயே பல்வேறு நோய்களுக்கு மருந்து தரப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராஜ்குமார் யாதவ் என்பவர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள அந்த முகாமுக்கு சென்றிருக்கிறார்.

ஆனால், அங்கே ஒரு பெரிய கியூ நின்றுள்ளது. இவ்வளவு கூட்டம் வரிசையில் நிற்பதை பார்த்ததுமே எல்லாருமே தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்திருக்கிறார்கள் என்று நினைத்து, அதே வரிசையில் போய் நின்றுள்ளார். அங்கிருந்த நர்ஸும் அவருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதன் பிறகுதான் தெரிய வந்தது, வெறிநாய்க்கடி எதிர்ப்பு தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தவர்கள் தான் அந்த வரிசையில் நின்றிருந்தவர்களாம்.

இதை கேட்டு யாதவ் கடுமையான அதிர்ச்சி அடைந்தார். இந்த விஷயம் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தெரியவந்ததையடுத்து, நர்ஸை சஸ்பெண்ட் செய்துவிட்டனர்.

அதேபோல பொறுப்பில் இருந்த டாக்டரும் சஸ்பெண்ட் ஆகியுள்ளார். தற்போது, கொரோனாவுக்கு பதிலாக வெறிநாய்க்கடிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட யாதவை தீவிரமாக டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், தானேவில் கொரோனா தடுப்பூசிக்கு பதில் ஒருவருக்கு ரேபிஸ் நாய் தடுப்பூசி போட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதையடுத்து, பொதுமக்களுக்கு கொஞ்சம்கூட குழப்பம் ஏற்படாத வகையில் சுகாதாரத்துறையினரின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையாக விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories