5 ரூபாய் டாக்டர் திருவேங்கடத்திற்கு சிலை திறப்பு!

thiruvenkadam
thiruvenkadam

5 ரூபாய் டாக்டர் என அழைக்கப்பட்ட மறைந்த திருவேங்கடத்திற்கு வியாசர்பாடியில் சிலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

வடசென்னையைச் சேர்ந்த மருத்துவர் மறைந்த திருவேங்கடம் வீரராகவன்.1973ஆம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர். ஏழை மக்கள் அதிகளவில் வசித்துவரும் வியாசர்பாடியில் உள்ள மக்களுக்கு ஆரம்பத்தில் இரண்டு ரூபாய்க்கு சிகிச்சை பார்த்து வந்தார். பின்னர், ஐந்து ரூபாய் வாங்கினர்.

இதற்கு அங்கிருந்த மருத்துவர்கள் சிகிச்சைக்கு குறைந்தது 100 ரூபாய் வாங்க வேண்டும் என இவரை வலியுறுத்தினர். அதுமட்டுமல்லாமல் இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ஆனால், அதற்கு மருத்துவர் திருவேங்கடம் ஒத்துப்போகவில்லை.

மாறாக “எந்த கட்டணமும் இல்லாமல் நான் படித்தேன். அதற்கு நான் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். அதனால், என்னைத் தேடி வரும் நோயாளிகளிடம் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதில்லை.

2015ஆம் ஆண்டில் பெய்த மழைக்குப் பின்னர் வியாசர்பாடியில் இருந்து வெளியேறினேன். ஆனால், அங்குள்ள கிளினிக்கில் தொடர்ந்து மருத்துவம் பார்த்து வருகிறேன்.

வியாசர்பாடி குடிசைப் பகுதி மக்களுக்கு என்று ஒரு மருத்துவமனை கட்டி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே என் கனவு.

தினமும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை எருக்கஞ்சேரியில் உள்ள கிளினிக் மற்றும் வியாசர்பாடியில் அசோக் பில்லர் அருகில் இருக்கும் கிளினிக்கில் மருத்துவம் பார்த்து வருகிறேன்.

pathmasri award
pathmasri award

எனது மனைவி ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். எனது மகன் தீபக் மற்றும் மகள் ப்ரீத்தி மொரீஷியஸில் மருத்துவம் படித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒரு மருத்துவமனை கட்ட உதவியாக இருப்பார்கள்” என நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார். இவருடன் படித்தவர்கள் வெளிநாட்டில் மருத்துவர்களாக இருந்தபோதும் சென்னை நகர மக்களுக்கு குறிப்பாக வட சென்னை மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்தவர் டாக்டா் திருவேங்கடம்.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரிந்த நிலையில் ஓய்வைப் பற்றி கவலைப்படாமல் வீட்டில் இருக்கும் நேரங்களில் கூட ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். 47 ஆண்டுகள் இடைவிடா மருத்துவ சேவையாற்றி கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலமானார்.

டாக்டா் திருவேங்கடம் அவா்களின் சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை சிகா சமூக நல அமைப்பு டாக்டா் திருவேங்கடத்தின் திருஉருவ சிலை ஒன்றை அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் அமைத்துள்ளனர்.

வட சென்னை பகுதியான வியாசா்பாடி, கணேசபுரம், ஆள்வாா் தெருவில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பல்வேறு பிரபலங்களும், தொண்டு நிறுவனத்தினரும் கலந்து கொள்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories