சைரன், ஹார்ன் ஒலிகளை இனிமையான இசையாக்க திட்டம்: அமைச்சர் நிதின் கட்கரி!

nithin gadkari
nithin gadkari

வாகனங்களில் ஹாரன் ஒலி எழுப்பினால் அதில் இந்திய இசை வருவதை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலை திட்ட பணிகள்
துவக்க விழாவில் நிதின் கட்கரி பேசுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது: போலீஸ் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களில் ஒலிக்கும் சைரன் சத்தம் கேட்பவர்களுக்கு எரிச்சல் கொடுக்கக் கூடிய வகையில் இருக்கிறது. எனவே அதை மாற்றி ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பாகும் இசை கோர்வையை, அவசர வாகனங்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

ஆகாசவாணி ரேடியோவில், இசை
கலைஞர் உருவாக்கிய இசை அதிகாலை நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படுவது வழக்கம்.

அந்த ஒலி கோர்வையை போலீஸ் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றில் பயன்படுத்தலாம் என்று நான் நினைக்கிறேன். இதன் மூலம் கேட்பவர்களுக்கும் மனதில் பதட்டம் ஏற்படாது.

bus lorry traffic
bus lorry traffic

தற்போது உள்ள சைரன் ஒலி சத்தம் எரிச்சலை உண்டு செய்வதாக இருக்கிறது. இவை காதுகளுக்கும் கேடு விளைவிக்கக் கூடியவை.

வாகனங்களின் ஹாரன் சத்தம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் செய்து வருகிறோம். இந்திய இசை கருவிகளின் ஒலி மட்டுமே வாகனங்களின் ஹாரன் சத்தத்தில் இருந்து வரும் வகையில் சட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

புல்லாங்குழல், தபலா, வயோலின், மவுத் ஆர்கன், ஹார்மோனியம் போன்ற ஒலி வரும் வகையில் ஏற்பாடு
செய்யப்படும்.

மும்பை-தில்லி இடையே ஒரு லட்சம் கோடி மதிப்பீட்டிலான நெடுஞ்சாலை திட்ட பணிகள் ஏற்கனவே கட்டுமான நிலையில் இருக்கின்றன. இது ஜவகர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை பகுதி வரை இணைக்கும்.

கடலில் ஒரு பாலம் கட்டி அதை பாந்த்ரா-வோர்லி கடல் இணைப்போடு இணைக்க திட்டமிட்டுள்ளேன். பின்னர் அது நரிமன் பாயிண்டிலிருந்து தில்லிக்கு 12 மணிநேரத்தில் வாகனங்களில் செல்ல வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும்.

இந்த சாலை அமைந்தால், மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் விபத்துகள் 1.5 லட்சம் மக்களின் உயிரைப் பறிக்கிறது. லட்சக்கணக்கானோர் காயமடைகிறாக்ல். சாலை விபத்துகளால் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தை இழக்கிறோம்.

மும்பை-புனே நெடுஞ்சாலையில் விபத்துகள் 50 சதவீதம் குறைந்துள்ளன. தமிழக அரசு விபத்துகள் மற்றும் இறப்புகளை 50 சதவீதம் குறைத்துள்ளது, ஆனால் மகாராஷ்டிராவில் இதே போன்ற வெற்றியை அடைய முடியவில்லை, என்றார்.

மஹாராஷ்டிராவில் விபத்துகளால் அதிக மக்கள் இறப்பதாகவும் நிதின் கட்கரி கூறினார். மேலும், வாகனங்களுக்கு ஆறு ஏர்பேக்குகளை கட்டாயமாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories