வெறிச்சோடிய வளாகம்! உள்ளே அனுமதிக்காததால் கொந்தளித்த பக்தர்கள்! அண்ணாமலை யானுக்கே வெளிச்சம்!

thiruvannamalai temple1
thiruvannamalai temple1

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அனுமதி சீட்டு இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் பெரும்பாலானவர்களும் அறநிலையத்துறையையும் மாவட்ட நிர்வாகத்தையும் திட்டியபடியே திரும்பிச் சென்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 23ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாட்களை தவிர மற்ற விழா நாட்களில் தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கவுள்ளனர்.

இதற்காக, உள்ளூர் பக்தர்கள் 3 ஆயிரம் பேரும், வெளியூர் பக்தர்கள் 10 ஆயிரம் பேரும் தினசரி சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு இ-பாஸ் கட்டாயம் பெறவேண்டும் என்றும், உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதிச் சீட்டு பெற வேண்டும் என்றும் நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!
thiruvannamalai temple2
thiruvannamalai temple2

இந்த அறிவிப்பை அடுத்து, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போலீஸார், நேற்று கோவிலில் ராஜகோபுரம் வழியாக சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதித்தனர். அப்போது பக்தர்களிடம் சுவாமி தரிசனம் செய்வதற்கான அனுமதிச் சீட்டு மற்றும் இ-பாஸ் உள்ளதா என்பதை சோதித்து பிறகே அனுமதித்தனர்.

அனுமதிச் சீட்டு பெறாமல் வந்தவர்களை சுவாமி தரிசனத்துக்கு என்றில்லாமல், கோவிலுக்கு உள்ளே செல்லக்கூட போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கோயிலுக்குள் வலம் வரக் கூட முடியாமல் தவித்தனர். அவர்களை உடனே இடத்தைக் காலி செய்யுமாறு போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பக்தர்கள் குறைவாக இருந்ததால் கோயில் வளாகமும் வெறிச்சோடிக் காணப்பட்டது.

திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் தரிசனத்துக்கு அனுமதிக்காமல், பக்தர்கள் அனுமதிச்சீட்டு இல்லாத காரணத்தினால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் மனவேதனையை ஏற்படுத்தியது.

உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதிச்சீட்டு இரு தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட நிலையில் நேற்று சரியான வகையில் வழங்கப்படவில்லை என்றும், சுவாமி தரிசனத்துக்கு இ- பாஸ் பெற இணையதளத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்றும் பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

ALSO READ:  T20 WC 2026: இறுதிப் போட்டியில் இந்திய அணி!
thiruvannamalai temple3
thiruvannamalai temple3

பிரதான கோபுர வாசல் அருகே பலர் காலணிகளை அப்படியே விட்டுச் சென்றனர். சிலர் கோபுரவாசல் கடந்து உள்ளே செருப்பு காலுடன் சென்றனர், போலீசார் உள்பட! சிலர் கோபுரத்தின் தெய்வ அம்சம் பொருந்திய சிற்பங்கள் உள்ள மேல் படிநிலை திண்டுகளில், செருப்புகளை வைத்தனர். இதைக் கண்டு பக்தர்கள் பலர் முகம் சுளித்தனர்.

கோயிலில் முறையான ஏற்பாடுகளை நிர்வாகம் இப்போது செய்வதில்லை! கட்டணம் வசூலிப்பதிலும், கோயிலுக்குள் பக்தர்களை விடக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தும் நிர்வாகம், விழாக்காலங்களில் கோயிலை முறையாக பராமரிப்பதிலும் கோயில் நடை முறைகளை பாதுகாப்பதிலும் கொஞ்சமும் அக்கறை காட்டுவதில்லை என்று மனம் குமுறினர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

Topics

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

Entertainment News

Popular Categories