தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு!

Published:

job - 2026

தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில் Social Worker பணிக்கு என பல்வேறு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்படும்.

பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சட்டம், சமூகவியல், குழந்தை உளவியல் போன்றவற்றில் எதாவது ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பர் 23-ம் தேதிக்குள் கீழே அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பணி தொடர்பாக வேறு ஏதாவது விவரம் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

மேலும் விவரங்களுக்கு: https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2021/12/2021121069.pdf

Related articles

Recent articles

spot_img