அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தொண்டை கரகரப்பு, தொண்டைப் புண், படர்தாமரை, பாண்டு யோகம்..!

Published:

health tips 1
health tips 1

தொண்டைப் புண் சரியாக…

அத்திமரத்தின் பட்டையை நீர் விட்டு இடித்து 2 அவுன்ஸ் சாறெடுத்து அத்துடன் சம அளவு பசும்பாலும் சிறிது கற்கண்டும் சேர்த்து சாப்பிட தொண்டைப் புண் குணமாகும்.

தொண்டைக் கரகரப்பு நீங்க…

மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து சம அளவு வெல்லம் சேர்த்து நெய் விட்டு லேகியம் போல் கிளறி இரண்டு வேளை ஐந்து கிராம் வீதம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கும்.

மாவிலையை கஷாயம் வைத்து தேன் கலந்து இரண்டு வேளை சாப்பிட குரலில் தெளிவு ஏற்படும்.

படர்தாமரை சரியாக…

பப்பாளி காயைக் கீறினால் வெண்ணிறமான பால் வடியும். அதனை படர் தாமரையின் மீது தடவி வர சில நாள்களில் குணமாகும்.

படை சரியாக…

காட்டாமணக்குச் செடியின் தண்டை இடித்து சாறெடுத்து படை மீது தடவி வர குணம் தெரியும்.

பாண்டு ரோகம் சரியாக…

அதி போகத்தாலும் கூடா ஒழுக்கத்தாலும் கல்லீரல் சீர் கெட்டு பாண்டு ரோகம் ஏற்பட்டு எப்பொழுதும் ஆயாசமும் சோர்வும் ஏற்படும். கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறெடுத்து ஓர் அவுன்ஸ் வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர பாண்டு ரோகம் குணமடையும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

Related articles

Recent articles

spot_img