‘கிறிஸ்துவ பள்ளியில்’ என்று ஊடகங்களே… விவாதிக்கத் தயாரா?

tirunelveli shcool2 - 2026

திருநெல்வேலி அருகே ஒரு “தனியார் பள்ளி” யின் கழிப்பறை சுவர் இடிந்து 3 சிறுவர்கள் பலியானது நெஞ்சை உருக வைக்கும் துயரச் சம்பவம்! அந்த இளஞ் சிறார்களின் பெற்றோருக்கு இதயபூர்வமான அனுதாபங்கள்!

ஆனால் வேறு சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை!
இரண்டு ஆண்டுகளுக்கு முன் – 2019ல் – மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து ஒரு சிறுவன் இறந்தான்! அதுவும் அவர்களின் சொந்த நிலத்தில் – பொறுப்பில்லாத தாய் தகப்பனின் அலட்சியத்தால்!

அதற்கு என்ன ஒப்பாரி வைத்தன இந்த ஊடகங்கள்!
இத்தனைக்கும் அந்தச் சிறுவனை மீட்கும் முயற்சியில் அப்போதைய தமிழக அரசு முழு மூச்சுடன் ஈடுபட்டது – அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர் மீட்புக் குழுவினருடனேயே இரவு பகல் பாராமல் கிடந்தார்!
ஆனால் இந்த ஒருதலைப்பட்ச மீடியாக்கள் அப்போது 24 மணி நேரமும் அந்த நிகழ்ச்சியை அப்படிப் பெரிதுபடுத்தி – இடது சாரி, நக்சல், திராவிடிய கருத்துக்களைப் பொறுக்குபவர்களை (OPINION GATHERERS) விட்டு அப்படி ஒரு ‘இந்து மத வெறுப்புப் பிரசாரத்தை’ நடத்தின.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..
tirunelveli shcool1 - 2026

“ஒரு தமிழ்க் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்துள்ள நிலையில் – தமிழர்களே தீபாவளிக் கொண்டாட்டம் தேவையா?”- என்று இந்து துவேஷக் கூச்சல் போட்டன!
ஒரு குழந்தையின் – பெற்றோரின் அலட்சியத்தால் நிகழ்ந்த – பரிதாப மரணத்தைக் கூட இந்து மதப் பண்டிகையின் மீதான வெறுப்பரசியலாக மாற்றினார்கள்!

நேற்று பாலிமர் கூட – செய்தி ஆரம்பத்தில் – ‘திருநெல்வேலியில் ஒரு தனியார் பள்ளி’- என்றுதான் கூறியது. பிறகு விரிவான செய்தியில் – CSI ஷேஃப்டர் பள்ளி என்று கூறினார்கள்!
இன்று ‘காலைக் கதிர்’- நாளேட்டில் மிகத் தெளிவாகத் தலைப்புச் செய்தியில்…

“திருநெல்வேலி டவுனில் – மாநகராட்சிக் கட்டிடம் அருகே – கிறிஸ்தவ CSI டயோசீஸ் 1818 முதல் நடத்தும் அரசு உதவி பெறும் சாப்டர் பள்ளி உள்ளது”- என்று ஒளிக்காமல் மறைக்காமல் நேர்மையாகச் செய்தியை வெளியிட்டு உள்ளார்கள்!

நான் இந்த தனியார் டிவி சேனல் இந்து விரோத நெறியாளர் கருத்துப் பொறுக்கிகளைக் (Opinion Gatherers) கேட்கிறேன்:-
இப்போது உன்னுடைய பகுத்தறிவு – இடதுசாரி – முற்போக்கு அறிவுஜீவிகளை வைத்து விவாதம் நடத்தேன் பார்ப்போம்!

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

“3 தமிழ்க் குழந்தைகள் ஒரு கிறிஸ்தவப் பள்ளியின் நிர்வாக அலட்சியத்தால் உயிர் இழந்துள்ளனர் – இந்த நிலையில் தமிழகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தேவையா?”
நாம் அந்த இளம் பிஞ்சுகளின் மரணத்தை மத விவாதம் ஆக்க விரும்பவில்லை! அந்த அநாகரிகம் நமக்குத் தேவையுமில்லை!

ஆனால் இந்து விரோத ஊடகங்களே – நெறியாளர்களே – பகூத்து அறிவுக் கொழுந்துகளே, மதச்சார்பற்ற முற்போக்குப் புரட்சிக் குஞ்சுகளே… இன்று நீங்கள் அதே போல விவாதிக்கத் தயாரா என்றே கேட்கிறோம்!

  • முரளி சீதாராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories