ரசாயன கலர் வடகம், சிப்ஸ்களால் நலிவடையும் அப்பளத் தொழிலைப் பாதுக்க அரசுக்கு கோரிக்கை!

appalam in madurai - 2026

கலர் வடகம், சிப்ஸ் போன்ற (கலர்)நிறமி, ரசாயன பொருட்களால்நலிவடைந்துவரும் அப்பளத் தொழிலை பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாரம்பரிய அப்பளத் தொழிலாளர் நலனை காக்க முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.உணவு தரக்கட்டுபாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, சிந்தாமணி, அனுப்பானடி, காமராஜபுரம், வில்லாபுரம், அவனியாபுரம், ஜெயந்திபுரம் பகுதிகளில் ஏராளமானோர் அப்பள தொழிலில் ஈடுபட்டு வருகினறனர்.தென் இந்தியர்களின் அருசுவை உணகளில் முக்கிய இடம் பெறுவது அப்பளம்தான்.

அந்த அப்பளம் தயாரிப்பில் தென் தமிழகத்தில் முன்னணியில் இருப்பது மதுரை மாவட்டம். இங்கு, சுமார் 60க்கும் மேற்பட்ட கம்பெனிகள், மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு,குறு உற்பத்தியாளர்கள்.

அப்பளத் தொழிலில் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில், பெரும்பான்மையாக பெண் தொழிலாளர்கள்தான் வேலை செய்கின்றனர்.உளுந்தை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும். அப்பளத்திற்கு தனி சுவை உண்டு.மேலும், உணவு தரக்கட்டுபாட்டு அமைப்பு மூலம் வழங்கப்படும்  தரசான்று பெறப்பட்ட பிறகே விற்பனைக்கு செல்கிறது.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

உளுந்து மூடை 4,500 ரூபாய் முதல் ஐயாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில், இருந்து தயாரிக்கப்படும் அப்பளங்கள் கிலோ 120 முதல் 150 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது .

இந்நிலையில், தற்போது கடைகளில் விற்கப்படும் கலர் வடகங்கள்,சிப்ஸ் வகைகளில் அப்பத்தையும் சேர்ப்பதனால், சில குளறுபடிகள் ஏற்படுகிறது. சிப்ஸ்,வடகங்களில் கலர் சாயம் பூசப்படுகிறது. மற்றும் மைதா மாவு மூலப்பொருளாக கலக்கப்படுவதால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது.மேலும், உணவு தரக்கட்டுபாட்டு சான்றிதழ் பெறப்படுவதில்லை.

கடந்த சில நாட்களாக வடகம், சிப்ஸ் வகைகளில் குடல் போன்ற உணவுப்பொருள் பயன்படுத்துவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாக  செய்திகள் வெளிவந்ததை அடுத்து அப்பளம் விற்பனை சரிந்துள்ளது. மேலும், அப்பளம் உடல் நலத்திற்கு தீங்கானது என செய்திகள மக்களிடை பரவுகின்றது.

ஆகையால், இதற்கு உடனடியாக தமிழக அரசு தலையிட்டு உடனடியாக அப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள  தொழிலாளர்கள் நலனில் தீர்வு காண வேண்டும்.

கலர் சாயம், மற்றும் மைதா பொருட்களை தடைசெய்ய நடவடிக்கை எடுத்தால், பல தொழிலாளர்களின் வாழ்வு மலரும் என்று அப்பளத் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கடந்த 2 வருடங்களாக கொரான பெருந்தொற்றால் நலிவடைந்த இந்த அப்பளத் தொழில் தற்போது, சீரடைந்துவரும் நிலையில் இது போன்ற தவறான செய்திகளால் மக்களிடையே அப்பளம் வாங்கும் எண்ணத்தை அழிக்கும் நிலை உள்ளது. 

ALSO READ:  இக்கணம் - தேவை சிக்கனம்!

ஆகையால்,  தமிழக முதல்வர், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, ஆகியோர் நடவடிக்கை எடுத்து எங்களின் வாழ்வாதரம் உயர வழிவகுக்க அப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories