December 6, 2025, 5:58 AM
24.9 C
Chennai

கிறிஸ்துவ பள்ளியின் மதமாற்ற டார்ச்சரால் உயிரிழந்த லாவண்யாவுக்கு நீதி கேட்டு… பாஜக., உண்ணாவிரதப் போராட்டம்!

bjp annamalai chennai protest4 - 2025

அரியலூரில் பள்ளி மாணவி லாவண்யா உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு பாஜக., சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியது.

கிறிஸ்துவப் பள்ளியில் பயின்று வந்த ஏழை இந்து மாணவி லாவண்யா, கிறிஸ்துவ மதத்துக்கு மாற வேண்டும் என்று தன்னையும் தன் பெற்றோர்களையும் பள்ளியில் வற்புறுத்தியதாகவும், தான் மறுத்துவிட்டதால், தன் படிப்பை நாசமாக்கி, தன்னை வேறு வேலைகளைச் செய்ய கட்டாயப் படுத்தியதாகவும் சொல்லி, விஷம் அருந்தினார்.

அவரது மரண வாக்குமூலத்தில், மத ரீதியான கொடுமைப்படுத்தல் இருந்ததாகவும், அதனால் தான் இதை கிறிஸ்துவ வலுக்கட்டாய கட்டாய மதமாற்றத்துக்கு எதிராகக் கையாள்வதாகவும் இந்து இயக்கங்கள் கூறின. இந்நிலையில், தமிழக பாஜக., சார்பில் நேற்று தமிழகத்தில் மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பாஜக.,வினர் மற்றும் இந்து இயக்கத்தினர் பெரும்பான்மையாக பங்கேற்று மாணவி லாவண்யா மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.

bjp annamalai chennai protest3 - 2025

இந்நிலையில் இன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழக பாஜக மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இந்த உண்ணாவிரதக் கூட்டத்தில் தலைமையேற்றுப் பேசிய கே.அண்ணாமலை… அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் மதச்சாயம் பூசவில்லை என்று கூறினார்.

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும், இந்த விவகாரத்தை சிபிஐ., தன் கையில் எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று, கே. அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறினார்.

bjp annamalai chennai protest - 2025

மேலும், அரியலூர் மாணவி மரணம் தொடர்பாக கட்டாயம் சிபிஐ., விசாரணை தேவை. மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி, மாணவி பேசிய வீடியோவை விசாரணை அதிகாரியிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். மாணவி மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை பாஜக., போராடும். மதமாற்றம் தொடர்பாக மாணவி பேசிய வீடியோ போலியானது என்பதற்கு ஆதாரம் இல்லை. தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் வேண்டும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

மாணவி இறந்த விவகாரத்தில் யாரும் மதச்சாயம் பூசவில்லை. உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனே ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories