சுவாமி விவேகானந்தர் தஞ்சைக்கு விஜயம் செய்த 125-வது ஆண்டு விழா.
தஞ்சை ரயில்வே நிலையத்தில் விவேகானந்தர் விஜயம் குறித்த செப்பேடு மற்றும் அவரது திருவுருவப் படத்தின் திறப்பு விழா இன்று (3.2.22) நடைபெற்றது.
ஐந்தரை அடி உயரமும் ஆறரை அடி அகலமும் கொண்ட செப்பேடு பிரதான வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி கோட்டம் உதவி வணிக மேலாளர் சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுமார் 100 பேரும் சுவாமிஜிக்கு புஷ்பாஞ்சலி செய்தனர் .