காதலி திருமணத்திற்கு காதலன் ஒட்டிய அஜித் போஸ்டரால் பரபரப்பு!

poster - 2026

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் பாய்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷ். இவரும் இட்டகவேலியைச் சேர்ந்த மெடிக்கல் ஷாப் ஒன்றில் வேலை பார்க்கும் இளம் பெண் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இவர்கள் காதலிக்கும் போது பல சுற்றுலா தலங்களுக்கு சென்றதோடு, அடிக்கடி தனிமையில் சந்தித்தும் உள்ளனர்.

இந்த நிலையில், அப்பெண்ணின் பெற்றோர்கள், மகளின் செல்போனை சோதனை செய்த போது அதில் அபிலாஷூம் தங்களது மகளும் சோந்து இருக்கிற புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து மகளிடம், பெற்றோர்கள் கேட்டபோது, ‘நானும் அபிலாஷும் காதலித்து வருகிறோம். அவனை தான் திருமணம் செய்து கொள்வேன்’ என உறுதியாக கூறியுள்ளார். அதற்கு பெற்றோர்கள் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அபிலாஷிடமிருந்து மகளை பிரிக்க பெற்றோர்கள் எடுத்த முயற்சியின் பலனாக அபிலாஷிடம் பேசுவதை அவர்களது மகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துள்ளார்.

இது அபிலாஷுக்கு ஆத்திரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதற்கிடையில் அப்பெண்ணுக்கு பெற்றோர்கள் கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் பேசி முடிந்து, நேற்று 7ம் தேதி திருமணமும் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

இதனைத் தெரிந்துகொண்ட அபிலாஷ், ‘ஆசை நாயகனின் வாழ்க்கை ஆரம்பம் விழா’ என்ற தலைப்பில் அபிலாஷ் மற்றும் அந்த பெண் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை போட்டு அதில் திருமணம் நாள் திருமணம் நடக்கும் இடமும் குறிப்பிட்டு நடிகர் அஜித்தின் புகைப்படத்தோடு, அஜித் நடித்த படத்தின் பெயரை வைத்து கவிதையாக எழுதி அதனை ஊர் முழுக்க ஒட்டியுள்ளார் அபிலாஷ்.

அதுமட்டுமல்லாமல், திருமணம் செய்ய இருந்த கருங்கல்லை சேர்ந்த அந்த மணமகனின் வீடு மற்றும் திருமணம் மண்டபத்திலும் போஸ்டரை ஒட்டியதால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது.

இது அப்பெண்ணுக்கும், அவரின் பெற்றோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பெண்ணின் பெற்றோர் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசாரை கண்டு அபிலாஷ் தலைமறைவானார். அதேசமயம், போலீஸ் பாதுகாப்புடன் அப்பெண்ணுக்கு திருமணம் நடந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Entertainment News

Popular Categories