காதலி திருமணத்திற்கு காதலன் ஒட்டிய அஜித் போஸ்டரால் பரபரப்பு!

poster - 2026

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் பாய்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷ். இவரும் இட்டகவேலியைச் சேர்ந்த மெடிக்கல் ஷாப் ஒன்றில் வேலை பார்க்கும் இளம் பெண் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இவர்கள் காதலிக்கும் போது பல சுற்றுலா தலங்களுக்கு சென்றதோடு, அடிக்கடி தனிமையில் சந்தித்தும் உள்ளனர்.

இந்த நிலையில், அப்பெண்ணின் பெற்றோர்கள், மகளின் செல்போனை சோதனை செய்த போது அதில் அபிலாஷூம் தங்களது மகளும் சோந்து இருக்கிற புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து மகளிடம், பெற்றோர்கள் கேட்டபோது, ‘நானும் அபிலாஷும் காதலித்து வருகிறோம். அவனை தான் திருமணம் செய்து கொள்வேன்’ என உறுதியாக கூறியுள்ளார். அதற்கு பெற்றோர்கள் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அபிலாஷிடமிருந்து மகளை பிரிக்க பெற்றோர்கள் எடுத்த முயற்சியின் பலனாக அபிலாஷிடம் பேசுவதை அவர்களது மகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துள்ளார்.

இது அபிலாஷுக்கு ஆத்திரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதற்கிடையில் அப்பெண்ணுக்கு பெற்றோர்கள் கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் பேசி முடிந்து, நேற்று 7ம் தேதி திருமணமும் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.

இதனைத் தெரிந்துகொண்ட அபிலாஷ், ‘ஆசை நாயகனின் வாழ்க்கை ஆரம்பம் விழா’ என்ற தலைப்பில் அபிலாஷ் மற்றும் அந்த பெண் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை போட்டு அதில் திருமணம் நாள் திருமணம் நடக்கும் இடமும் குறிப்பிட்டு நடிகர் அஜித்தின் புகைப்படத்தோடு, அஜித் நடித்த படத்தின் பெயரை வைத்து கவிதையாக எழுதி அதனை ஊர் முழுக்க ஒட்டியுள்ளார் அபிலாஷ்.

அதுமட்டுமல்லாமல், திருமணம் செய்ய இருந்த கருங்கல்லை சேர்ந்த அந்த மணமகனின் வீடு மற்றும் திருமணம் மண்டபத்திலும் போஸ்டரை ஒட்டியதால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது.

இது அப்பெண்ணுக்கும், அவரின் பெற்றோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பெண்ணின் பெற்றோர் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசாரை கண்டு அபிலாஷ் தலைமறைவானார். அதேசமயம், போலீஸ் பாதுகாப்புடன் அப்பெண்ணுக்கு திருமணம் நடந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories