இராமநாதபுரம்: 5 ஆண்டுகள் இல்லாத அளவு பறவைகள் அதிகரிப்பு!

Published:

bird 1 - 2026

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம் வன உயிரினக் கோட்டம் சார்பில், மாவட்டத்தில் தேர்த்தங்கால், சித்திரங்குடி, காஞ் சிரங்குளம், சக்கரக்கோட்டை, கீழ செல்வனூர், மேலச்செல்வனூர் ஆகிய பறவைகள் சரணாலய கண் மாய்கள் மற்றும் திருஉத்தரகோச மங்கை கண்மாய், ராமநாதபுரம் பெரிய கண்மாய், மல்லல் கண்மாய், ஆர்.எஸ்.மங்கலம், மேல்மாந்தை கண்மாய்களில் 2-ம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பிப்.12,13-ல் நடைபெற்றது.

வன உயிரினக் காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர் ஆலோசனையின்படி உதவி வனப் பாதுகாவலர் சோ.கணேசலிங்கம் மற்றும் ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் பா.ஜெபஸ் ஆகியோர் மேற்பார்வையில் இப்பணி நடந்தது.

இதில் சென்னை, கோவை, மதுரையைச் சேர்ந்த பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர் கள் பங்கேற்றனர். சரணாலய பகுதியைக் காட்டிலும், வெளியிலும் பறவைகள் அதிகம் காணப்படுவது தெரிய வந்தது.

சிக்கல் கண்மாயில் சுமார் 241 பூ நாரைகள் (பிளமிங்கோ) இருந்தன. சரணாலய கண்மாய்களில் சுமார் 75 சதவீதம் நீர் நிரம்பி உள்ளது. இதனால் பறவைகள் 2 மற்றும் 3 முறை இனப்பெருக்கம் செய்ய வாய்ப்புகள் உள்ளன.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

இக்கணக்கெடுப்பில் சுமார் 120 இனங்கள் வகைப்படுத்தப்பட்டன. அதிகளவில் நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர்க்காகம் மற்றும் கொக்கு வகைகள் கண்டறியப்பட்டன. இதில் சுமார் 25,000 பறவைகள் உள்ளன.

இது கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் அதிகம் என வனச்சரகர் பா.ஜெபஸ் தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img