இந்தியாவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா மார்ச் 1இல் நடைபெறுவதை ரொட்டி இக்கோயில் மஹா சிவராத்திர உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது
இதையொட்டி கோயிலில் சுவாமி சன்னிதி முன் உள்ள தங்கக் கொடி மரத்தில் சிவாச்சாரியா்கள் தலைமையில் திங்கட்கிழமை வேதபாராயண முறைப்படி கொடியேற்றப்பட்டது. அப்போது ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள், பிரியாவிடை அலங்காரத்துடன் எழுந்தருளினா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாா்ச் 1 ஆம் தேதி மஹாசிவராத்திரி தேரோட்டமும், 2 ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.

உற்சவத்தில் நாள்தோறும் சுவாமி, அம்பாள் பஞ்ச மூா்த்திகளுடன் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த 12 நாள்கள் திருவிழாவின் போது வழக்கமாக ராமநாதசுவாமி கோயில் கலையரங்கத்தில் நடைபெறும் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.




