உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்..தமிழர்கள் நாடு திரும்ப உதவி…

ரஷிய படைகளுக்கு அதிபர் புதினின் அதிரடி உத்தரவால்
உக்ரைனில் சூழ்ந்த போர்மேகங்களால் 20 கி.மீ. தொலைவில் ரஷ்யா படைபலத்தை குவித்து
உக்ரைன் மீது மிக கடுமையான ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் உலக நாடுகள் கடும் அதிர்ச்சி யில் உள்ளனர்.

உக்ரைன் தலைநகர் கீவ் வில், ரஷ்யா குண்டு மழையை இன்று காலை முதல் பொழிய தொடங்கியது.
கிழக்கு உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் ரஷ்ய படைகள் தாக்கி வருகிறது .
உக்ரைனின் முக்கிய நகரமான ஒடேசாவில் ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்தனர். குண்டுகள் வெடித்ததில் தீப்பற்றி எரிகிறது ஒடேசா துறைமுகம். மேலும் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
தலைநகர் கிவ்வில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் முயற்சிசெய்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் வடக்கும் மற்றும் கிழக்கு பகுதிகளில் ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, உக்ரைன் மீது சைபர் தாக்குதலையும் நடத்தி வருகிறது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

உக்ரைன் மீது சைபர் தாக்குதலையும் தொடுத்துள்ள ரஷ்யா, உக்ரைனைச் சேர்ந்த அரசு இணையதளங்களையும் முடக்கியுள்ளது. தகவல் அழிப்பு, டூல் மால்வேர் மூலம் உக்ரைனின் நூற்றுக்கணக்கான முக்கிய இணையதளங்களின் தகவல்களையும், ரஷ்ய அமைச்சர்களின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டு முடக்கியுள்ளதாகவும், உக்ரைனின் நூற்றுக்கணக்கான முக்கிய இணையதளங்களை சைபர் தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைனில் உள்ள ராணுவ மற்றும் விமான தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்ய படைகள். உக்ரைன் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. ஐந்து ரஷ்ய ஜெட் விமானங்களையும் ஒரு ஹெலிகாப்டரையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தனது ராணுவ நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும், அமைதியான தீர்வு வரும் என நம்புகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவை உலக நாடுகள் தடுக்க வேண்டும். உக்ரைனின் அமைதியான நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது.நூறு வீரர்கள் செத்துமடிந்தனர்
என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

இந்த நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திவருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.அமைதியான முறையில் தீர்வு காண வாய்ப்பு கொடுக்க வேண்டும்.என
ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினுக்கு, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவால் இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை எண் சென்செக்ஸ் 1,428 புள்ளிகள் சரிந்து தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 16,647 புள்ளிகள் சரிவடைந்தது.

உக்ரைனில் கல்வி பயிலும் மாணவர்கள், பணியாற்றும் தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என அயலக தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது.
044-28515288 /96000 23645 /
99402 56444 இணையதளம் : nrtamils.tn.gov.in தொடர்புகொள்ளலாம்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போரால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியதாக கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் அபாயம்.ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உக்ரைனில் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டதால்
இந்தியர்களை மீட்க, இன்று காலை டெல்லியில் இருந்து உக்ரைன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஈரான் வான் வெளியில் சுற்றி வந்த நிலையில், பாதி வழியில் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியுள்ள நிலையில் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி அவசரமாக வெளியுறவு துறை மற்றும் உள்துறை அமைச்சகம் மற்றும் உயர் அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தினார்.

IMG 20220224 125038 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Entertainment News

Popular Categories