இன்று மதுரையில் இராமர் பாதம் தரிசனம்!

ramar padam - 2026

அயோத்தி ராமா் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, ராமா் பாதம் ராமேசுவரத்திலிருந்து வாகன யாத்திரையாக வியாழக்கிழமை புறப்பட்டது.

உத்தரப் பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருவதை முன்னிட்டு, ராஷ்ட்ரிய கவி சங்கம் சாா்பில் அக்கோயிலில் ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

அதற்காக, ராமர் இலங்கையில் எழுந்தருளி சீதாபிராட்டியை மீட்ட நுவெரெலி மாவட்டம் சீதாவதி எனும் இடத்திலிருந்து கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி ராமர் பாதம் கொண்டுவரும் வாகன யாத்திரை தொடங்கியது.

மேலும் இலங்கையில் முதலில் அனுமன் இறங்கிய இடத்திலும் பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத்தொடா்ந்து ராமேஸ்வரத்துக்கு ராமர் பாதம் கொண்டு செல்லப்பட்டு அங்கு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்த யாத்திரையானது, ராமேஸ்வரத்துக்கு புதன்கிழமை வந்து சேர்ந்தது. அங்கு, ராமர் பாதத்துக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், அங்கிருந்து மதுரை நோக்கி ராமர் பாதம் வாகன யாத்திரை வியாழக்கிழமை காலை தொடங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு, மத்திய பிரதேசம் ராஷ்ட்ரிய கவி சங்க நிா்வாகி பாபா சத்யநாராயணா தலைமை வகித்தார். சௌராஷ்ட்ரா முன்னேற்றக் கழகத் தலைவரும், மதுரை தொழிலதிபருமான வி.ஜி. ராமதாஸ், ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவா் கே. முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்தரப் பிரதேச பசு பாதுகாப்பு அமைப்பின் நிா்வாகி மீரட் சந்தீப் பெகல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இதில், அகா்வால் சமாஜம் சுரேஷ்குப்தா, மதுரை தொழிலதிபா் சஞ்சய் மெஹ்ரா, பசு பாதுகாப்பு இயக்கம் மீரட் தீபக் தியாகி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ராமர் பாதம் சுமந்து வரும் வாகனம் வெள்ளிக்கிழமை காலை 6 முதல் 9 மணி வரையில் காமராஜா் சாலையில் உள்ள சௌராஷ்டிர ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்படுகிறது.

அங்கு, பொதுமக்கள் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், சேலத்துக்கு யாத்திரை வாகனம் புறப்படுகிறது.

ராமபிரான் சென்ற இடங்களுக்கெல்லாம் ராமர் பாதம் கொண்டுசெல்லப்படும் எனவும், 40 நாள்கள் பயணத்துக்குப் பிறகு ராம நவமியன்று அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் இந்த யாத்திரை நிறைவடையும் எனவும், ராஷ்ட்ரிய கவி அமைப்பினர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories