வட இந்தியாவில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் வாக்களிப்பு இன்று நிறைவு பெற்றது.
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று இன்றுடன் நிறைவு பெற்றது.வருகிற 10ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்தநிலையில் தேர்தல் வாக்குபதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு கள் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப சவஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவா மாநிலத்தில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் பாஜக ஆட்சியமைக்கும என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.




