ஐந்து மாநில தேர்தலில் நான்கில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரசுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. பஞ்சாபில் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி

ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது.
இதில் காலை 11.30நிலவரப்படி உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது.
தேசிய அளவில் பரபரபுக்கு உள்ளான உத்தரபிரதேசம் லக்கிம்பூர் கெரி, ஹத்ராஸ் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



