மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைவலையில் எஸ்.பி.வேலுமணி..

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை, மைல்கல்லில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மீண்டும் சோதனைநடத்தி வரும் நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., வீட்டில் தென்காசி டி.எஸ்.பி. மதியழகன் தமையிலான போலீசார் இன்று சோதனை நடத்தினர்.வீட்டுக்குள் யாரும் செல்ல முடியாதபடி கதவுகளை அடைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை நடைபெறுவதையொட்டி அவரது வீட்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

images 55 1 - 2026
202203151006131541 Tamil News Tamil News Vigilence Dept raid in former ADMK Minister SP MEDVPF - 2026
IMG 20220315 WA0033 - 2026

சோதனை நடைபெறுவதை அறிந்த அ.தி.மு.க.வினர் எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ., வீட்டு முன்பு திரண்டு போலீசாருக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இந்தநிலையில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., எஸ்.பி.வேலுமணியின் வீட்டிற்கு வந்தார். அவரை போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர்.

அதனை தொடர்ந்து வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி வீட்டின் உள்ளே செல்ல முயன்றார். அவரை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. இதனையடுத்து அங்கு கூடியிருந்த அ.தி.மு.க.வினர் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 10 பேர் மற்றும் 3 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவுசெய்துள்ளது ‌

சென்னை, கோவை, சேலம் உள்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 58 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக சோதனை நடத்திவருகிறது.
கோவையில் மட்டும் 41 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது 2015-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு மார்ச் வரை, 58 கோடியே 23 லட்ச ரூபாய் முறைகேடாக சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இது வருமானத்தை விட 3,928% சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கீழ் இயங்கிய துறையான ஊரக வளர்ச்சித் துறையில் சென்னையில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றும் சரவணனுக்கு ஒப்பந்த பணிகள்விட்டதில் நடைபெற்ற ஊழலில்தொடர்பு இருக்கலாம் என்பதால் அவருடைய வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பொட்டனேரியில் கண்காணிப்பு பொறியாளர் சரவணனுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் இன்று காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார்இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் வீட்டுக்கு எதிரே உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறும் வீடு ஒதுக்குப்புறமாக கிராமத்தின் தோட்டப் பகுதியில் உள்ளதால் நடைபெறுவது வெளியில் தெரியாமல் உள்ளது. சோதனை நடைபெறும் வீட்டில் சரவணன் சகோதரி தங்கம்மாள் மட்டுமே உள்ளார்.அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம் மாவட்டம், ஆத்தூர், விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் வரதராஜப்பெருமாள். இவர், ஊரக வளர்ச்சித் துறை நிர்வாகப் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். தற்போது சென்னை, ஊரக வளர்ச்சித் துறை பயிற்சி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 6:30 முதல் சோதனையை துவங்கியுள்ளனர்.
அதேபோல், ஆத்தூர், உடையார்பாளையம் பகுதியில் உள்ள ஏ.வி.ஆர் ஜுவல்லர்ஸ் கடையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்துகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories