பதுங்கி இருந்த ரவுடி சாகுல்ஹமீதை ட்ரோன் மூலம் வளைத்துப் பிடித்து தென்காசி காவல்துறையினர்!

shakul hameed arrested - 2026

தென்காசி மாவட்டம் தென்காசி நகரைச் சேர்ந்த சாகுல் ஹமீது, இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது,

கொலை முயற்சி வழக்கு தொடர்பாக சாகுல் ஹமீதை தென்காசி காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்,

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சாகுல் ஹமீது கடந்த இரு தினங்களுக்கு முன்பு தென்காசி அருகே பச்ச நாயக்கன் பொத்தை பகுதியை தன் வசமாக்கி கொண்டு, அங்கு பொதுமக்களை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது,

மேலும் அப்பகுதியில் வசிக்கும் நபர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அச்சத்தில் இருந்த நிலையில் அங்கு ஆடுமேய்க்க சென்ற பீர் முகம்மது என்ற நபரை ஆயுதங்களால் தாக்கியதாகவும், அதில் பீர்முகமது படுகாயம் அடைந்துள்ளதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அது சம்பந்தமாக தென்காசி போலீசார் சாகுல்ஹமீது என்பவரை தீவீரமாக தேடி வந்தனர்.

sahul hameed - 2026

எனினும் காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து பொத்தை குளம் பகுதியில் உள்ள சுமார் 50 ஏக்கர் இடத்திற்குள் ஓடி மறைந்து இருந்ததாக தகவல்கள் தெரியவந்தது .

மேலும் இன்று காலை அப்பகுதிக்கு குளிக்க சென்ற பெண்களை மிரட்டியதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது, இந்த தகவலையடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ண ராஜ் IPS, தென்காசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மணிமாறன் ஆகியோரின் அறிவுரைப்படி தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் மேற்படி சாகுல் ஹமீது என்பவரை உடனடியாக கைது செய்ய ஆலோசனை செய்து பறக்கும் கேமரா வசதியுடன் ஆய்வாளர் திரு பாலமுருகன் தலைமையில் தனிப்பிரிவு தலைமைக்காவலர் முத்துராஜ், மாரியப்பன் குற்றப்பிரிவு காவலர்கள் அருள், கார்த்திக், அலெக்ஸாண்டர், பொன்ராஜ் மற்றும் சவுந்தரராஜ் ஆகியோர் உடனடியாக பச்ச நாயக்கன் பொத்தை பகுதிக்கு சென்று தேடி வந்தனர்.

tenkasi police - 2026

டிரோன் கேமரா உதவியுடன் பச்ச நாயக்கன் பொத்தை குளம் முழுவதும் தேடிய நிலையில் அங்கு குளத்தின் நடுவே நீருக்குள் படர்ந்திருக்கும் செடிகளுக்கு மத்தியில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது,

உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் சினிமா பட பாணியில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அரிவாளுடன் பதுங்கி இருந்த சாகுல் ஹமீதை கைது செய்தனர்.

தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி பட்டியலில் இருக்கும் சாகுல் ஹமீதை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்து மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் துணிச்சலாக கைது செய்த தென்காசி காவல் நிலைய போலீசாரை அப்பகுதி மக்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்,

மேலும் அவர் பதுங்கி இருந்த இடத்தை டிரோன் கேமரா மூலம் கண்டறிந்து காவல்துறையினர் துணிச்சலுடன் அங்கு சென்று சாகுல் ஹமீதை கைது செய்த வீடியோவையும் வெளியிட்டு உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

Topics

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Entertainment News

Popular Categories