விரைவில் செங்கோட்டை-மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில்!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டை-மதுரை(காலை) மதுரை-செங்கோட்டை(மாலை) சாதாரண கட்டண பயணிகள் இரயில் விரைவில் மீண்டும் இயக்கப்பட உள்ளது.இதுபோல் மதுரை- செங்கோட்டை -மதுரை இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயிலை பயணிகள் ரயிலாக மாற்றி இயக்கப்பட உள்ளது.

மதுரை -செங்கோட்டை இடையேயான ரயில் சேவை கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதையடுத்து, இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை- செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க ப்பட்டு வருகிறது.

மதுரை – செங்கோட்டை விரைவு சிறப்பு ரயில் (06504) மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு 10:35 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.

மறு மாா்க்கத்தில் செங்கோட்டை- மதுரை விரைவு சிறப்பு ரயில் (06503) செங்கோட்டையிலிருந்து மாலை 3.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் 12, சரக்கு மற்றும் காப்பாளா் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டாலும் எதிர் திசையில் செங்கோட்டை மதுரை செங்கோட்டை இடையே காலை மாலை இயக்கப்பட்ட பயணிகள் ரயில் இயக்காததால் பயணிகள் அவதிப்பட்டனர்.
இந்த ரயில் போலவே பல்வேறு நகரங்களுக்கிடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் இயக்கப்படாமல் இருந்தது.

images 33 2 - 2026
FB IMG 1647488465364 - 2026

தற்போது இந்த பயணிகள் ரயில்கள் மீண்டும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனாவால் தமிழகத்தில் நிறுத்தப்பட்ட 21பயணிகள் ரயிலை மீண்டும் இயக்கவும் தற்போது இயங்கும் சிறப்பு விரைவு ரயில்களில் சிலவற்றை பயணிகள் ரயிலாக இயக்கவும் மதுரை தேனி வழியில் புதிய பயணிகள் ரயில் இயக்கவும் தென்னக இரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories