கேரளாவில் சொத்து பிரச்சினையில் நால்வர் தீ வைத்து எரிப்பு…

குடும்ப பிரச்சினை காரணமாக மகன், மருமகள் மற்றும் பேத்திகள் இருவரை முதியவர் கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி ஜில்லா தொடுபுழா, சீனிக்குழி பகுதியை சேர்ந்தவர் ஹமீத் ( 79).

இவரது மகன் அப்துல் பைசல் (45). திருமணமாகி விட்டது. மனைவி ஷீபா (45). இவர்களுக்கு மெஹர் (16), அப்சனா (14) என்ற 2 மகள்களும் உள்ளனர்.அப்துல் பைசலுக்கும், அவரது தந்தை ஹமீதுக்கும் இடையே குடும்ப சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு மூண்டது.

வெள்ளிக்கிழமை அப்துல் பைசல், அவரது மனைவி ஷீபா மற்றும் மகள்கள் இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இரவில் அவர்களின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி சென்றனர்.

அங்கு அப்துல் பைசல், அவரது மனைவி ஷீபா மற்றும் மகள்கள் 4 பேரும் தீயில் எரிந்து கொண்டிருந்தனர். அவர்கள் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை காப்பாற்ற முயன்றனர்.இதற்காக தண்ணீர் எடுக்க சென்றபோது, தொட்டியில் இருந்த தண்ணீர் அனைத்தும் காலியாக இருந்தது. தீயில் எரிந்த அப்துல் பைசல் மற்றும் அவரது குடும்பத்தினரை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக தொட்டி தண்ணீர் அனைத்தும் திறந்து விடப்பட்டிருப்பது தெரியவந்தது.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இந்த கொடூர சம்பவம் பற்றி அருகே வசிக்கும் சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், 4 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் குடும்ப பிரச்சினை காரணமாக அப்துல் பைசல் மற்றும் அவரது மனைவி, மகள்களை உயிரோடு எரித்து கொன்றது, அப்துல் பைசலின் தந்தை ஹமீது என தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

IMG 20220319 WA0000 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories